முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி, அதிமுக, நாதக, தவெக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது செந்தில்பாலாஜியின் வேட்புமனு மீது அதிமுக மற்றும் நாதக வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். வேட்புமனுவில் தவறுகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் திமுகவினர் மிரட்டும் வகையில் பேசியதாகவும் நாதக வேட்பாளர் பேரறிவாளன் குற்றம்சாட்டினார்.
















