தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு,
தமிழக தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக செயல்பட்டு வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
















