சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பாக சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு மத்திய அமைச்சரும் அவிநாசி தொகுதி பாஜக வேட்பாளருமான எல் முருகன் ஆலோசனை வழங்கினார்.
அவிநாசி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன், சக்தி கேந்திர பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் வாக்காளர்களை அணுகும் முறை குறித்தும் எல்.முருகன் அறிவுறுத்தல் வழங்கினார். மேலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.
அவிநாசி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எல்.முருகன் போட்டியிடும் நிலையில், தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் முன்னிலையில், மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான எல்.முருகன் திறந்து வைத்தார்.
இதனிடையே, அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கருவலூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது சாலையோர கடையில் விவசாயிகளுடன் தேநீர் அருந்தி எல்.முருகன் கலந்துரையாடினார்.
















