தென்காசியில் பனை ஏறும் கூலித் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் சார்பு ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூர் கிராமத்தில் மணிகண்டன் என்ற இளைஞர் கள் இறக்கியதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க சென்ற சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டன் சார்பு ஆய்வாளரை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்பிற்காக சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா, பனை ஏறும் கூலி தொழிலாளியான மணிகண்டனை காலில் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவை பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
















