திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சாலையோர கிறிஸ்தவ ஆலயத்தை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
கொடைக்கானல் எம்.எம். தெருவில் உள்ள மைக்கேல் அதிதூதர் ஆலயம் மற்றும் அதையொட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், கிறிஸ்தவ ஆலயத்தை அகற்ற உத்தரவிட்டது. இதன்பின்னரும் அந்த ஆலயம் அகற்றப்படாத நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மேல் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
இதையடுத்து, இரவோடு இரவாக மைக்கேல் அதிதூதர் ஆலயத்தை போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் அதிகாரிகள் அகற்றினர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளதால், அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பணிகளை தடுக்க முயன்ற பங்குத்தந்தை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















