நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம் குமார், டீ கடையில் டீ போட்டு கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் டாக்டர் எஸ்.டி.பிரேம் குமார் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் பட்டணம் பகுதியில் அவர் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ போட்டு கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள், வேட்பாளர் எஸ்.டி.பிரேம் குமாருக்கு ஆரத்தி எடுத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.
















