நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 குழுவினர் 10 நாள் ஆய்வை வெற்றிரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்.
நிலவின் மறுபக்கத்தை அடைவதற்காக வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியிலிருந்து சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 756 மைல்கள் தொலைவுக்கு நாசாவின் ஆர்டெமிஸ் 2 குழு விண்வெளியில் பயணித்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக 1970-இல், அப்போலோ 13 விண்கலம் மேற்கொண்ட தொலைதூர பயணமே சாதனையாகக் கருதப்பட்டது. தற்போது அச்சாதனையை முறியடித்துள்ள இக்குழு, நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமாா் 4 ஆயிரத்து 70 மைல்கள் தொலைவில் பறந்தது.
இந்நிலையில் ஆர்டெமிஸ்-2 விண்கலமும், அதன் பயணித்த நான்கு பேர் கொண்ட குழுவும் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்கினர். ஓரியன் விண்கலம் மூலம் இந்திய நேரப்படி அதிகாலை ஐந்தரை மணிக்கு சான்டியாகோவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் அவர்கள் பத்திமாக இறங்கினர்.
















