உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் உள்ளிட்டோரை தேர்தல் பணியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சுதந்திரமாக நடைபெற இருவரையும் மாற்ற வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
















