கிண்டி ரேஸ் கிளப் - நீர்நிலையா ? பூங்காவா?
Mar 15, 2026, 06:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிண்டி ரேஸ் கிளப் – நீர்நிலையா ? பூங்காவா?

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்கா அமைக்கப்படுமா ? அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலோசனையை ஏற்று புதிய நீர்நிலை உருவாக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இன்றைய Behind the news பகுதியில் பார்க்கலாம்…!

சென்னையில் வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 160 ஏக்கர் நிலம் 1945ம் ஆண்டு கிண்டி ரேஸ்கிளப்புக்கு 99 ஆண்டு காலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. குத்தகை காலம் முடிவடையும் முன்பே, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதாக கூறி குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, அந்நிலத்தில் பூங்கா அமைக்க முடிவு செய்திருப்பதாக அரசாணை பிறப்பித்துள்ளது.

பிற மாநகரங்களை ஒப்பிடும் போது சென்னையில் தனி மனிதருக்கான பசுமை நிலப்பகுதி மிகக் குறைவாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டு மற்றும் திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்தே சென்னையின் பரப்பளவில் 6.7 சதவிகிதம் மட்டுமே பசுமை வெளியாக உள்ளது.

சென்னையின் பசுமைப் பகுதியை உருவாக்கும் நோக்கிலும், அதிகரிக்கும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும் அதிகளவிலான பசுமை வெளிகளை சென்னையில் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களோட உடல்நலன், உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் போதுமான இடங்களை உருவாக்க முடிவெடுத்த தமிழக அரசு, சென்னை கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தை தோட்டக்கலைத்துறை மூலம் பூங்காவாகவும், பசுமை வெளியாகவும் மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், வேளச்சேரி ஏரிகள் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் பூங்காவிற்கு பதிலாக நீர்நிலையுடன் கூடிய பூங்காவை உருவாக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையின் போதும், ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என மீண்டும் ஆலோசனை வழங்கியது.

இது தொடர்பாக பிறதுறை செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்த பசுமைத் தீர்ப்பாயம், வெள்ளத்தால் ஒருபுறமும், வறட்சியால் ஒருபுறமும் பாதிக்கப்படும் சென்னையில் புதிய பசுமை பூங்காவை உருவாக்குவதை விட நீர்நிலை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த ஆலோசனைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சென்னையில் ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளுக்கு உயிர் கொடுப்பதும்,, புதிய நீர்நிலைகளை உருவாக்குவதும் மிக அவசியம் என தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் சென்னையில் இருந்த நீர்நிலைகளில் பாதியளவு கூட தற்போது இல்லாததன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் பருவமழை, புயல், வெள்ளத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

பெருவெள்ள காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிக்க உதவுவதோடு, கோடைக் காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் பயன்படும் என்பதால் கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலை அமைப்பதே சரியானதாக இருக்கும் என பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்கா அமைக்கப்படுமா ? அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலோசனையை ஏற்று புதிய நீர்நிலை உருவாக்கப்படுமா ? என்ற அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

Tags: Kindy Race Club - Watershed ? A park?CHENNAI NEWS
ShareTweetSendShare
Previous Post

கொலையாளி யார்? : பெங்களூரை அதிரவைத்த ஃப்ரிட்ஜ் கொலை வழக்கு!

Next Post

திருப்பதி லட்டு விவகாரம் – ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் காவல்நிலையத்தில் புகார்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies