நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் - தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?
Oct 26, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

Web Desk by Web Desk
Oct 26, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, வங்கதேசத்தின் ஜனநாயக முன்னேற்றத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இஸ்லாமிய சார்பு ஆட்சியின் கீழ், ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் வங்க தேச முப்படைகளையும் அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப் பாட்டு வருகின்றன. இதனால் வங்களதேசத்தின் அரசியல் எதிர்காலம் மட்டுமல்ல, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பும் ஆபத்தில் உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த மே 13ம் தேதி வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் மற்றும் அதன் துணை அமைப்புகளையும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுத் தடை செய்தது. முன்னதாக, கடந்த மே 11ம் தேதி, உலகளவில் தடைசெய்யப்பட்ட ABT அமைப்பின் தலைவரும் நீண்டகால அல்-கொய்தா கூட்டாளியுமான ஜாசிம் உதின் ரஹ்மானியின் தலைமையில் அவாமி லீக் எதிர்ப்பு பேரணி பகிரங்கமாக நடந்தது.

வங்கதேசத்தில் ஹிஸ்புத்-தஹ்ரிர் (HuT) போன்ற பிற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும் ஒரு கலிபாவை உருவாக்க வேண்டும் என்றும், இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகக் குரல் கொடுத்து வருகின்றன. இந்தச் சுழலில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, அவாமி லீக் உட்பட பல ஜனநாயக அமைப்புகள் வங்கதேசத்தில் தடை செய்யப் பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியை அந்நாட்டு தேர்தல் ஆணையமும் தடை செய்து பதிவை ரத்து செய்துள்ளது. உலகளவில் தேடப்படும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இப்போது வங்க தேச அரசின் மையமாக உள்ளனர். அதிபரை நீக்கிவிட்டு, அடிப்படைவாத இஸ்லாமிய முகாமில் இருந்து ஒருவரை அதிபராக நியமிக்க முகமது யூனுஸ் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை எதிர்க்கும் ராணுவத் தளபதி ஜெனரல் வக்கர்-உஸ்-ஜமானுக்கு எதிராக, முப்படைகளையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் யூனுஸ் எடுத்து வருகிறார். இதற்கு, “சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” (ICT) என்ற அமைப்பைத் தனது ஆயுதமாக யூனுஸ் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அக்டோபர் 22ம் தேதி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலைகள், காவல் சித்ரவதைகள் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 15 உயர் ராணுவ அதிகாரிகளைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். மேலும், முப்படைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, பாரம்பரிய இராணுவத்தை ஒழித்து விட்டு, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை போல இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தில் இயங்கும் “இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் உள்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்துவார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கெல்லாம், வழிகாட்டுதல் மற்றும் நிதியளிப்பதில் பாகிஸ்தானின் ISI மற்றும் துருக்கியின் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக ஈடுபடுவதாகப் பல சர்வதேச உளவுத்துறை ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, ரோஹிங்கியா அகதிகள் முகாம்களுக்குள், சவுதி மற்றும் கட்டாரின் நிதியுதவி பெற்ற “மனிதாபிமான” அமைப்புகள் தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாத பிரசங்கங்களால் நிறைந்த இந்த முகாம்கள், இந்தியாவின் வடகிழக்கு மற்றும் மியான்மரின் ராக்கைன் மாநிலத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் ஜிஹாதி மையங்களாக மாறியுள்ளன. யூனுஸின் ஆலோசகர்கள், தற்போதுள்ள அரசியலமைப்பை மாற்றி இஸ்லாமிய புரட்சிகர அரசை அறிவிக்கும் திட்டங்களைத் தீட்டிவருவதாகக் கூறப்படுகிறது.

வங்கதேசத்தின் புதிய இஸ்லாமிய புரட்சிகர அரசில் , நூற்றுக்கணக்கான ராணுவ உயர் அதிகாரிகளை “துரோகிகள்” என்று முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனைகள் வழங்கப் படலாம். பயங்கரவாதிகளின் கைகளில் வங்கதேசம் என்பது தெற்காசியாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கும்.

இந்தியாவின் வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும். சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்ட முயற்சிகளைச் சீர்குலைக்கும். ஆசியான் நாடுகளில் பயங்கரவாத கிளர்ச்சிகள் ஏற்படும். இஸ்தான்புல்லில் இருந்து ஜகார்த்தா வரை அமைதியின்மை உருவாகும்.

மொத்தத்தில், இந்திய-பசிபிக் முழுமையும் பயங்கரவாதத்தால் தாக்கப்படும். வங்கதேசத்தில் குடி கொண்டுள்ள இஸ்லாமிய ராணுவமயமாக்கல் தெற்காசியாவின் பேரழிவுக்கு வழி வகுக்கும் என்று உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.

Tags: Bangladesh on the brink of crisis - Is the new Islamic army a threat to South Asian countries?புதிய இஸ்லாமிய ராணுவம்நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம்
ShareTweetSendShare
Previous Post

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Next Post

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

Related News

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies