மக்கள்தொகையில் சரிவை சந்திக்கும் ஐரோப்பா : 2,100-ம் ஆண்டில் பாதியாக குறையும்?
Jan 14, 2026, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மக்கள்தொகையில் சரிவை சந்திக்கும் ஐரோப்பா : 2,100-ம் ஆண்டில் பாதியாக குறையும்?

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை படுவேகமாகச் சரிந்து வருகிறது. 2,100-ம் ஆண்டில் தற்போதைய எண்ணிக்கையைவிட பாதியளவாகக் குறையும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எதனால் இந்த சூழல் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

ஒரு நாடு பொருளாதாரத்தில் நிலைத்து நிற்பதற்கு, முதியவர்களும் இளைஞர்களும் சமமான எண்ணிக்கையில் இருப்பது அவசியம். அனுபவமும், இளைய சமுதாயமும் கைக்கோர்க்கும் போது தான், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அசைக்க முடியாத அளவுக்கு வலுப்பட்டு நிற்கும். உலகின் முன்னணி நாடாக அறியப்பட்ட ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலை வகிப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஏனென்றால், வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்திய ஜப்பான், நாட்டில் முதியவர்கள் எண்ணிகையை கூடிக்கொண்டே சென்றதை கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவை இன்று எதிர்கொண்டு வருகிறது. ஜப்பான் எப்படி சரிவை சந்தித்ததோ, அதே போன்றதொரு சூழல் தான் ஜரோப்பிய நாடுகளில் தற்போது உருவாகியிருக்கிறது.

குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், போலந்து போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்திருக்கிறது. 2024-ம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில், 3 லட்சத்து 18 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பதாகவும், 1941 – ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்து பார்த்தால், இதுவே குறைந்த எண்ணிக்கை எனவும் தெரிய வந்திருக்கிறது.

எதனால் கருவுறுதல் விகிதம் குறைந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால், பொருளாதார அழுத்தம் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, செலவினம் அதிகரிப்பு ஆகியவற்றால் குழந்தை பெற்றுகொள்வதை தாய்மார்கள் தள்ளிப்போடுவதாகவும், இதனால் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் கூடிக்கொண்டே செல்வதாகவும் காரணத்தை குறிப்பிடுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

ஸ்பெயின், இத்தாலி, போலந்து போன்ற நாடுகளில் பாதி கிராமங்கள் இப்போதே காலியாகி விட்டதாகவும், இதே நிலை தொடர்ந்தால் 2100-ம் ஆண்டுக்குள் ஐரோப்பாவின் மக்கள்தொகை பாதியளவாகக் குறைந்து விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கூடுதல் மகப்பேறு விடுப்பு, நிதி உதவிகளை வாரி வழங்குவது என எந்தக் குட்டிக்கரணம் போட்டாலும், மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படவில்லை என்பதையே தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

இளைஞர்கள் நல்ல வேலை தேடி ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். பெண்களோ குடும்பம் வலுவான பொருளாதார நிலையை அடையும் வரை, குழந்தை பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதையெல்லாம் சரிபடுத்த வேண்டிய அரசாங்கமோ கை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

ஏஐ மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை வைத்துச் சேதாரத்தை குறைக்கலாம். ஆனால் மனிதர்கள் மனிதர்கள் தான் என அழுத்தமாகத் தெரிவிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். வலுவான பொருளாதார கொள்கைகளை வகுத்தால் தவிர, பழைய சூழலை மீட்டெடுப்பது கடினம் எனக் கூறும் அவர்கள், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சரியான திசையில் பயணிப்பதாகவும் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

Tags: NEWS TODAYtoday newsமக்கள்தொகைEurope faces population decline: Will it halve by 2100?
ShareTweetSendShare
Previous Post

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தடுத்தால் வனத்துறையினாின் வேலை பறிபோகும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Next Post

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு – முதலமைச்சர்களுக்கு கடிதம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies