நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு - முதலமைச்சர்களுக்கு கடிதம்!
Jun 13, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு – முதலமைச்சர்களுக்கு கடிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 25, 2025, 09:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக சரணடையவுள்ளதாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ள நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 18ஆம் தேதி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலங்கானா மாநில எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்று நக்சல் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களுக்கு கடந்த 22ஆம் தேதி மாவோயிஸ்ட் சிறப்பு மண்டல குழுவின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மாவோயிஸ்ட் இயக்கச் செயல்பாடுகளையும், ஆயுதப் போராட்டங்களையும் கைவிட்டு சரணடைய விரும்புவதாகவும், மாநில அரசுகள் வழங்கும் மறுவாழ்வு திட்டத்தை ஏற்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மாவோஸ்ட்டுகள் சரணடைய அடுத்தாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மூன்று மாநில அரசுகளும் நிதானத்தை கடைப்பிடித்து, தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தங்கள் முறையீட்டின் பின்னணியில் எந்த மறைமுக நோக்கமும் இல்லை என்றும்,
தொலைதுாரத்தில் உள்ள போராளிகளுக்கு தகவல் சென்று சேரும் வகையில், தங்களது கோரிக்கையை அடுத்த சில நாட்களுக்கு வானொலியில் ஒலிபரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: JharkhandMAHARASHTRAMaoistsState Chief MinistersMaoists surrender announcementmadhya pradeshwest bengalTelanganaChhattisgarh
ShareTweetSendShare
Previous Post

மக்கள்தொகையில் சரிவை சந்திக்கும் ஐரோப்பா : 2,100-ம் ஆண்டில் பாதியாக குறையும்?

Next Post

ஓபிஎஸ் தலைமையில் தனிக்கட்சி – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தகவல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies