மக்கள்தொகையில் சரிவை சந்திக்கும் ஐரோப்பா : 2,100-ம் ஆண்டில் பாதியாக குறையும்?
Sep 11, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மக்கள்தொகையில் சரிவை சந்திக்கும் ஐரோப்பா : 2,100-ம் ஆண்டில் பாதியாக குறையும்?

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 09:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை படுவேகமாகச் சரிந்து வருகிறது. 2,100-ம் ஆண்டில் தற்போதைய எண்ணிக்கையைவிட பாதியளவாகக் குறையும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எதனால் இந்த சூழல் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

ஒரு நாடு பொருளாதாரத்தில் நிலைத்து நிற்பதற்கு, முதியவர்களும் இளைஞர்களும் சமமான எண்ணிக்கையில் இருப்பது அவசியம். அனுபவமும், இளைய சமுதாயமும் கைக்கோர்க்கும் போது தான், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அசைக்க முடியாத அளவுக்கு வலுப்பட்டு நிற்கும். உலகின் முன்னணி நாடாக அறியப்பட்ட ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலை வகிப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஏனென்றால், வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்திய ஜப்பான், நாட்டில் முதியவர்கள் எண்ணிகையை கூடிக்கொண்டே சென்றதை கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவை இன்று எதிர்கொண்டு வருகிறது. ஜப்பான் எப்படி சரிவை சந்தித்ததோ, அதே போன்றதொரு சூழல் தான் ஜரோப்பிய நாடுகளில் தற்போது உருவாகியிருக்கிறது.

குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், போலந்து போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்திருக்கிறது. 2024-ம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில், 3 லட்சத்து 18 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பதாகவும், 1941 – ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்து பார்த்தால், இதுவே குறைந்த எண்ணிக்கை எனவும் தெரிய வந்திருக்கிறது.

எதனால் கருவுறுதல் விகிதம் குறைந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால், பொருளாதார அழுத்தம் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, செலவினம் அதிகரிப்பு ஆகியவற்றால் குழந்தை பெற்றுகொள்வதை தாய்மார்கள் தள்ளிப்போடுவதாகவும், இதனால் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் கூடிக்கொண்டே செல்வதாகவும் காரணத்தை குறிப்பிடுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

ஸ்பெயின், இத்தாலி, போலந்து போன்ற நாடுகளில் பாதி கிராமங்கள் இப்போதே காலியாகி விட்டதாகவும், இதே நிலை தொடர்ந்தால் 2100-ம் ஆண்டுக்குள் ஐரோப்பாவின் மக்கள்தொகை பாதியளவாகக் குறைந்து விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கூடுதல் மகப்பேறு விடுப்பு, நிதி உதவிகளை வாரி வழங்குவது என எந்தக் குட்டிக்கரணம் போட்டாலும், மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படவில்லை என்பதையே தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

இளைஞர்கள் நல்ல வேலை தேடி ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். பெண்களோ குடும்பம் வலுவான பொருளாதார நிலையை அடையும் வரை, குழந்தை பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதையெல்லாம் சரிபடுத்த வேண்டிய அரசாங்கமோ கை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

ஏஐ மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை வைத்துச் சேதாரத்தை குறைக்கலாம். ஆனால் மனிதர்கள் மனிதர்கள் தான் என அழுத்தமாகத் தெரிவிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். வலுவான பொருளாதார கொள்கைகளை வகுத்தால் தவிர, பழைய சூழலை மீட்டெடுப்பது கடினம் எனக் கூறும் அவர்கள், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சரியான திசையில் பயணிப்பதாகவும் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

Tags: NEWS TODAYtoday newsமக்கள்தொகைEurope faces population decline: Will it halve by 2100?
Share
Tweet
SendShare
Previous Post

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தடுத்தால் வனத்துறையினாின் வேலை பறிபோகும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Next Post

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சரண் அடைவதாக மாவோயிஸ்டுகள் அறிவிப்பு – முதலமைச்சர்களுக்கு கடிதம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies