சுயசார்பு பாதையில் சீறிப்பாயும் இந்தியா : பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே உருவாக்க 10 ஆண்டுகள் இலக்கு!
Jan 14, 2026, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுயசார்பு பாதையில் சீறிப்பாயும் இந்தியா : பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே உருவாக்க 10 ஆண்டுகள் இலக்கு!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் இலக்குடன், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

இந்தியா பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பிற நாடுகளை அதிகம் சார்ந்திருக்காமல், தனது தேவைகளை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆத்மநிர்பர் பாரத் என்ற சுயநிறைவு திட்டத்தை முன்னெடுத்தது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதும், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப்புகள், MSME-க்கள், விவசாயம், பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, டிஜிட்டல் இந்தியா போன்ற பல துறைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரித்து, வெளிநாட்டு இறக்குமதிகளை குறைத்து, உலக சந்தையில் இந்தியாவை ஒரு வலுவான, போட்டித்திறன் கொண்ட பொருளாதார சக்தியாக உருவாக்குவதையே இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா தனது பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தியை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவத்திற்கு தேவையான பெரும்பாலான உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாகப் பேசிய பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் இறக்குமதி சார்பு குறையும் எனவும், இன்னும் சில ஆண்டுகளில் பெரும்பாலான உபகரணங்கள் இந்திய தயாரிப்பாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய உபகரணங்களே பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் சார்பு அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

பணத்தட்டுப்பாடு காரணமாகச் சேவை காலம் முடிந்தும் அந்த உபகரணங்களை மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய சூழல் இருப்பதாகவும் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்தார். இவை அனைத்தையும் மீறித் தற்போது பாதுகாப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான தொகை இந்தியாவிற்குளேயே செலவிடப்பட்டு வருவதாகக் கூறிய ராஜேஷ் குமார் சிங், ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 75 சதவீதம் தொகையை உள்நாட்டிலேயே செலவிட வேண்டும் என்ற அரசின் இலக்கை இது தாண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த நிதியாண்டில் பாதுகாப்பு துறைக்கான செலவில் கிட்டத்தட்ட 85 முதல் 86 சதவீத தொகை இந்திய நிறுவனங்களிடமே செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2023 – 2024 நிதியாண்டில் மொத்த பாதுகாப்புதுறை உற்பத்தி 1 லட்சத்து 54 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில், அதில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 434 கோடி மதிப்பிலான உற்பத்தி முழுவதும் உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் நடந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 – 2015-ம் நிதியாண்டில் இது 46 ஆயிரத்து 429 கோடியாக இருந்ததை ஒப்பிட்டுப் பார்த்தால், பாதுகாப்பு துறையின் வளர்ச்சி 174 சதவீத உயர்வு கண்டுள்ளதை இது காட்டுகிறது. இதற்குட்பட்ட இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியும் புதிய உயரத்தை எட்டியுள்ளது. குறிபபக 2014-ம் ஆண்டு ஆயிரம் கோடிக்கும் குறைவாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, 2024-ம் நிதியாண்டில் 23 ஆயிரத்து 622 கோடியாக உயர்ந்துள்ளது.

எனினும் ஜெட் இஞ்சின் போன்ற சில உயர் தொழில்நுட்ப துறைகளில் 100 சதவீத சுயநிறைவை பெறுவது கடினம் என்பதால், நம்பகமான சில வெளிநாடுகளின் விநியோக சங்கிலியை இந்தியா சார்ந்திருக்க வேண்டியிருக்கும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பல முதலீட்டாளர்கள் பாதுகாப்பு துறைகளில் செயல்படும் ஸ்டார்ட் அப்நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் CIA போல் அரசு தனியாக வெஞ்சர் கேபிடல் நிறுவனம் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மத்திய அரசின் இது போன்ற முயற்சிகளின் பலனாகப் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா வரலாறு காணாத உயரத்தை எட்டியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு பட்ஜெட்டை இந்திய நிறுவனங்களுக்கு அதிகம் வழங்குவது, புதிய தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்களை தேர்வு செய்து கடன்கள், ஆர்டர்கள் வழங்குவது போன்ற பணிகளை அரசு செய்வதன் மூலம் பாதுகாப்பு துறைக்கான முதலீடுகள் படிப்படியாக இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே சுமார் 16 ஆயிரம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்பு துறையில் முக்கிய பங்கு வகித்து, உள்நாட்டு பாதுகாப்பு திறனை வலுப்படுத்தி வருகின்றன. அதனடைப்படையில் இதுவரை 462 நிறுவனங்களுக்கு 788 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில் “ஆத்மநிர்பர் பாரத்” திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் இந்தியா எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகள், நாட்டைப் பாதுகாப்பு உபகரணங்களில் வெளிநாடுகளை குறைவாகவே சார்ந்திருக்கும் ஒரு சுயநிறைவு பெற்ற சக்தியாக மாற்றும் திசையில் நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

உள்நாட்டு நிறுவனங்களின் பங்கு, ஏற்றுமதி உயர்வு, ஸ்டார்ட் அப்புகள் மற்றும் MSME-களின் வளர்ச்சி ஆகியவை தொடர்ந்தால், வரும் ஆண்டுகளில் இந்தியா உலக பாதுகாப்பு சந்தையிலும் ஒரு முக்கிய மையமாக உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

Tags: india armyIndia is moving towards self-reliance: 10-year target to develop defense equipment domesticallyசீறிப்பாயும் இந்தியாPM ModiIndiaRajnath Singh
ShareTweetSendShare
Previous Post

ஐஎன்எஸ் அரிதாமன் விரைவில் சேவைக்கு அனுப்பப்படும் – கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி

Next Post

ஜி.எஸ்.டி பலனை மக்களுக்கு வழங்காமல் ஊட்டச்சத்தைப் பறிக்கும் ஆவின் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies