WhatsApp பயன்படுத்த இனி சிம் கார்டு அவசியம் : சைபர் மோசடிகளை தடுக்க புதிய கட்டுப்பாடு!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

WhatsApp பயன்படுத்த இனி சிம் கார்டு அவசியம் : சைபர் மோசடிகளை தடுக்க புதிய கட்டுப்பாடு!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாட்ஸ்அப், டெலகிராம் போன்ற App-களை பயன்படுத்த மத்திய அரசு தற்போது சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இன்றைய தேதிக்கு இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை மட்டும் சுமார் 53 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். டெலகிராம் செயலியை 8 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். Signal, SnapChat, ShareChat, Arattai, Josh உள்ளிட்ட செயலிகளை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், அனைத்தும் சேர்த்து 100 கோடியை தாண்டும்.

இந்த மாபெரும் எண்ணிக்கை சைபர் மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது. இருந்த இடத்தில் இருந்துகொண்டு கோடி கணக்கில் மோசடி செய்ய இத்தகைய செயலிகள் அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

உதாரணமாக, வாட்ஸ்அப் செயலியில் புதிய கணக்கை தொடங்க வேண்டும் என்றால், பயன்பாட்டில் உள்ள சிம் கார்டு தேவை. அதன் மூலம் OTP-யை ஒருமுறை பெற்றுவிட்டால் போதும், வாட்ஸ்அப் கணக்கைத் தொடங்கி விடலாம். பிறகு அந்தச் சிம் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியமோ, அந்தச் சிம் கார்டை நாம் பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமோ என்ற தேவையே இல்லை.

இந்த வாய்ப்பைக் கண்டுகொண்ட சைபர் குற்றவாளிகள், வாட்ஸ்அப் கணக்கை தொடங்கியவுடன், சிம் கார்டுகளை அகற்றிவிடுகின்றனர். இதனால், அவர்களை கண்டுபிடிப்பது பல சமயங்களில் சிரமமான காரியமாக மாறி விடுகிறது. இதனை தடுக்க எண்ணிய மத்திய அரசு, டெலிகாம் சைபர் செக்யூரிட்டி விதிகளில் தற்போது சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனிமேல் வாட்ஸ்அப், டெலகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்றால், சிம் கார்டு ஆக்டிவாக இருக்க வேண்டும்.

அதேபோல, தற்போது சிம் கார்டு இல்லாத மொபைல்களில் உள்ள App-களை, Wi-Fi வசதியை கொண்டு இயக்கிக் கொள்ள முடியும். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தம், இந்த ஓட்டையையும் அடைத்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் உள்ள மற்றொரு சிறப்பம்சம், அதனை கணினியிலும் பயன்படுத்த முடியும் என்பது. ஆனால் இந்த அம்சமும் சைபர் குற்றவாளிகளுக்குச் சாதகமாக உள்ளது.

எனவே, இதனையும் தடுக்கும் வகையில், சிறு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, கணினியில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்தால், 6 மணிநேரத்திற்கு மட்டுமே அது பயன்பாட்டில் இருக்கும். பின்னர் அதுவாகவே லாக்-அவுட்டாகி விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினியில் தொடர்ச்சியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு 6 மணிநேரத்திற்கும் ஒருமுறை அதனை லாக்-இன் செய்ய வேண்டும் எனத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிம் பைண்டிங் முறை ஜி-பே, ஃபோன்பே போன்ற செயலிகளிலும், வங்கி ஆப்களிலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. இந்த நடைமுறை தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டெலிகாம் சைபர் செக்யூரிட்டி விதிகளில் செய்யப்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் சைபர் மோடிகளை வெகுவாகக் குறைக்கும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாற்றங்கள் அனைத்தும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: சிம் கார்டுwhatsappSIM card now required to use WhatsApp: New regulation to prevent cyber fraudWhatsApp பயன்படுத்த இனி சிம் கார்டு அவசியம்
Share
Tweet
SendShare
Previous Post

தோட்டக்கலைத் துறையில் தோண்டத் தோண்டப் பெருகும் ஊழல் ஊற்று – நயினார் நாகேந்திரன்

Next Post

நாடாளுமன்றத்திற்கு காரில் நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி.!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies