WhatsApp பயன்படுத்த இனி சிம் கார்டு அவசியம் : சைபர் மோசடிகளை தடுக்க புதிய கட்டுப்பாடு!
Jun 13, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

WhatsApp பயன்படுத்த இனி சிம் கார்டு அவசியம் : சைபர் மோசடிகளை தடுக்க புதிய கட்டுப்பாடு!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாட்ஸ்அப், டெலகிராம் போன்ற App-களை பயன்படுத்த மத்திய அரசு தற்போது சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

இன்றைய தேதிக்கு இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை மட்டும் சுமார் 53 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். டெலகிராம் செயலியை 8 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். Signal, SnapChat, ShareChat, Arattai, Josh உள்ளிட்ட செயலிகளை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், அனைத்தும் சேர்த்து 100 கோடியை தாண்டும்.

இந்த மாபெரும் எண்ணிக்கை சைபர் மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது. இருந்த இடத்தில் இருந்துகொண்டு கோடி கணக்கில் மோசடி செய்ய இத்தகைய செயலிகள் அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

உதாரணமாக, வாட்ஸ்அப் செயலியில் புதிய கணக்கை தொடங்க வேண்டும் என்றால், பயன்பாட்டில் உள்ள சிம் கார்டு தேவை. அதன் மூலம் OTP-யை ஒருமுறை பெற்றுவிட்டால் போதும், வாட்ஸ்அப் கணக்கைத் தொடங்கி விடலாம். பிறகு அந்தச் சிம் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியமோ, அந்தச் சிம் கார்டை நாம் பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமோ என்ற தேவையே இல்லை.

இந்த வாய்ப்பைக் கண்டுகொண்ட சைபர் குற்றவாளிகள், வாட்ஸ்அப் கணக்கை தொடங்கியவுடன், சிம் கார்டுகளை அகற்றிவிடுகின்றனர். இதனால், அவர்களை கண்டுபிடிப்பது பல சமயங்களில் சிரமமான காரியமாக மாறி விடுகிறது. இதனை தடுக்க எண்ணிய மத்திய அரசு, டெலிகாம் சைபர் செக்யூரிட்டி விதிகளில் தற்போது சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனிமேல் வாட்ஸ்அப், டெலகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்றால், சிம் கார்டு ஆக்டிவாக இருக்க வேண்டும்.

அதேபோல, தற்போது சிம் கார்டு இல்லாத மொபைல்களில் உள்ள App-களை, Wi-Fi வசதியை கொண்டு இயக்கிக் கொள்ள முடியும். ஆனால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தம், இந்த ஓட்டையையும் அடைத்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் உள்ள மற்றொரு சிறப்பம்சம், அதனை கணினியிலும் பயன்படுத்த முடியும் என்பது. ஆனால் இந்த அம்சமும் சைபர் குற்றவாளிகளுக்குச் சாதகமாக உள்ளது.

எனவே, இதனையும் தடுக்கும் வகையில், சிறு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, கணினியில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்தால், 6 மணிநேரத்திற்கு மட்டுமே அது பயன்பாட்டில் இருக்கும். பின்னர் அதுவாகவே லாக்-அவுட்டாகி விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினியில் தொடர்ச்சியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு 6 மணிநேரத்திற்கும் ஒருமுறை அதனை லாக்-இன் செய்ய வேண்டும் எனத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிம் பைண்டிங் முறை ஜி-பே, ஃபோன்பே போன்ற செயலிகளிலும், வங்கி ஆப்களிலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. இந்த நடைமுறை தற்போது வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டெலிகாம் சைபர் செக்யூரிட்டி விதிகளில் செய்யப்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் சைபர் மோடிகளை வெகுவாகக் குறைக்கும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாற்றங்கள் அனைத்தும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: சிம் கார்டுwhatsappSIM card now required to use WhatsApp: New regulation to prevent cyber fraudWhatsApp பயன்படுத்த இனி சிம் கார்டு அவசியம்
ShareTweetSendShare
Previous Post

தோட்டக்கலைத் துறையில் தோண்டத் தோண்டப் பெருகும் ஊழல் ஊற்று – நயினார் நாகேந்திரன்

Next Post

நாடாளுமன்றத்திற்கு காரில் நாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி.!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies