பாங்காங் த்சோ அருகில் சீன ராணுவ தளம்-உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா -சிறப்பு தொகுப்பு
Sep 14, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாங்காங் த்சோ அருகில் சீன ராணுவ தளம்-உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா -சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Jan 6, 2026, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாங்கோங் த்-சோ அருகில் சீன துருப்புகள் தங்குவதற்காக ராணுவ தளம் கட்டப்பட்டு வருவதாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன… இது இருநாடுகளுக்கு இடையேயான எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளன….

பாங்கோங் த்-சோ ஏரி புவியியல் ரீதியாக முக்கியத்துவம் பெறாவிட்டாலும், சுஷூல் அப்ரோச் பகுதிக்குச் செல்லும் பாதையாக இருப்பதே இதன் முக்கியத்துவத்தை அதிகரிக்கச்செய்கிறது.

மலைத் தொடர்கள் நிறைந்த இப்பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ, சுஷூல் அப்ரோச் பகுதியையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் சீனாவுக்கு உள்ளது. பாங்கோங் த்-சோ ஏரியின் தெற்கு மற்றும் வடக்குக் கரைப் பகுதிகள் வழியாகவே சீனா அதிக அளவில் ஊடுருவ முயற்சித்தை ஏற்கனவே உறுதிபடுத்தியிருக்கிறது இந்திய ராணுவம்…

1962-ம் ஆண்டு இந்தியா – சீனப் போரின்போது இந்திய ராணுவம் மீது சீனா நடத்திய தாக்குதலில் சுஷூல் அப்ரோச் பகுதிக்கு முக்கிய பங்கு உண்டு…. போரின்போது முதலில் சிரிஜாப் பகுதியை இழந்த இந்திய ராணுவம், 1962-ம் ஆண்டு அக்டோபர் 22-ல் பாங்கோங் த்-சோ ஏரியின் வடக்குக் கரைப் பகுதியில் மொத்தமாகக் கட்டுப்பாட்டை இழந்தது.

பாங்கோங் த்-சோ ஏரியின் தெற்குக் கரையில் உள்ள யூலா பகுதியில் இருந்த ராணுவ நிலைகளை இந்தியா கைவிட வேண்டிய சூழலும் ஏற்பட்டது…

1999 கார்கில் போரின்போது `ஆபரேஷன் விஜய்-க்காக இந்திய ராணுவம் பாகிஸ்தானுடன் போரிட சென்ற சூழலைப் பயன்படுத்தி, பாங்கோங் த்சோ ஏரியின் கரையில் இந்திய எல்லைக்குள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்குச் சாலை அமைத்தது சீனா… இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் தற்போது பிரச்சனை வெடித்திருக்கிறது.

பாங்கோங் த்சோ ஏரி அருகே ராணுவ தளத்தை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது சீனா… இந்த விவகாரம் செயற்கைக்கோள் புகைப்படங்கள்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதன்படி, கப்பல் தளம், துருப்புகள் தங்குமிடம் போன்றவற்றை நான்கு மடங்கு வேகத்தில் சீனா அமைத்து வருகிறது. இந்தக் கட்டமைப்புகள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் அமைந்திருந்தாலும், பாங்கோங் த்சோ பகுதிக்கு அருகில் இருப்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது…

மேலும் இது பிராந்திய உரிமை கோரல் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரு பக்கம் ராஜதந்திர ரீதியில் இரு தரப்பு உறவுகள் முன்னேற்றம் பெற்று வரும் சூழலில், சீனாவின் இந்தச் செயலை இந்தியா மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது….

உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் தற்போது ரோந்துப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. எல்லையில் அடிக்கடி அத்துமீறலைக் காட்டி வரும் சீனாவுக்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது…

Tags: indian army powerIndiachinaindian armychina armychina army vs indian army
Share
Tweet
SendShare
Previous Post

ரூ.28 கோடிக்கு ஏலம் போன டுனா மீன்!

Next Post

பாமக தொண்டர்கள் விருப்பப்படி என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளோம் – அன்புமணி

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies