தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்- பிரதமர் நரேந்திர மோடி
Aug 17, 2025, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்- பிரதமர் நரேந்திர மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர், வரும் 2024 லோக்சபா தேர்தலில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டுகளை பெறுவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Jul 19, 2023, 11:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுடில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இந்தக் கூட்டணி உருவாகி, 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வாஜ்பாய், அத்வானியால் உருவான இந்தக் கூட்டணியை, பிரகாஷ் சிங் பாதல், பாலசாகேப் தாக்கரே, அஜித் சிங், சரத் யாதவ் போன்ற தலைவர்கள் மெருகேற்றினர்.

நம் நாட்டில் கூட்டணி அமைப்பது பாரம்பரியமாக உள்ளது. ஆனால், எதிர்மறையான நோக்கத்துடன் உருவாக்கப்படும் கூட்டணி வெற்றி பெற்றதில்லை. கடந்த 1990களில் நாட்டை ஸ்தம்பிக்க வைக்க, அரசுகளை உருவாக்கவும், கவிழ்ப்பதற்காகவும் காங்கிரஸ் அமைத்த கூட்டணி தோல்வி அடைந்தது.

அதே நேரத்தில், 2014க்கு முன் அமைக்கப்பட்ட காங்கிரஸ் கூட்டணி அரசு, முழு ஆட்சிக்காலம் பதவியில் இருந்தது. ஆனால், கொள்கைகள் முடங்கின; அரசு நிர்வாகம் ஸ்தம்பித்தது. பிரதமருக்கு மேல் ஓர் அதிகார மையம் இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்டாயத்தால் உருவான கூட்டணியல்ல; பங்களிப்பை உணர்த்தும் கூட்டணி. கூட்டணியின் சிறந்த பங்களிப்பில், இதில் உள்ள அனைவருக்கும் பெருமை உண்டு.

இந்தக் கூட்டணியானது, பல்வேறு மாநிலங்களின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய, அழகான வானவில் போன்றது. மற்ற எல்லாவற்றையும்விட, நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கே எப்போதும் முக்கியத்துவம் தருகிறது. எந்தவொரு கட்சிக்கு எதிராகவும் இந்த கூட்டணி அமைக்கப்படவில்லை; நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக உருவாக்கப்பட்டது.

மகாத்மா காந்தி, அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா ஆகியோர் போதித்த சமூக நீதியின் பாதையில், இந்தக் கூட்டணி பயணித்து வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி தன்னை அர்ப்பணித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியானது,  இந்திய மக்களை ஒற்றுமைப் படுத்துகிறது; ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி, மக்களை பிளவுபடுத்துகிறது. நாங்கள் நிகழ்காலத்துக்காக மட்டும் பணியாற்றுவதில்லை; சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் பாடுபடுகிறோம். கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் வரை, அரசு நிர்வாகத்தில், அரசு அலுவலகங்களில் சுதந்திரமாக சுற்றி வந்த தரகர்களை துாக்கி எறிந்துள்ளோம்.

அரசியலில் போட்டிகள் இருக்கலாம்; பகைமை இருக்கக் கூடாது. ஆனால், எதிர்க்கட்சிகள், நமக்கு எதிராக அவதுாறான கருத்துகளைத் தெரிவிப்பதுடன், நம்மை வீழ்த்த நினைக்கின்றன. எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தபோதும், பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதையும், முலாயம் சிங், சரத் யாதவ் ஆகியோருக்கு பத்ம விருதுகளை வழங்கி இந்தக் கூட்டணி அரசு அழகு பார்த்தது.

சுயநல அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கலாம்; ஆனால், இணைந்திருக்க முடியாது. மக்களின் அறிவுத்திறன் குறித்து எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிட்டுள்ளன. எதற்காக இந்தக் கட்சிகள் தற்போது கூட்டணி அமைத்துள்ளன என்பது மக்களுக்கு தெரியும்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசை மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர்.
வரும் 2024 லோக்சபா தேர்தலில், 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டுகளை பெறுவோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர். இந்த மக்கள் சக்தியை, உலக நாடுகளும் அறிந்துள்ளன. இந்தக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன என்பது மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உரையாற்றினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒரு நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த உள்ளது- பிரதமர் மோடி

Next Post

நேரடி வரி வசூலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நான்காம் இடம் பிடித்துள்ளது

Related News

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies