மேட்டூர் அணையில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
Mar 18, 2026, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டூர் அணையில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 26, 2023, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 48,025 கனஅடியாக அதிகரிப்பு .இதனால் அணையின் நீர் அளவு வினாடிக்கு 119 கன அடியிலிருந்து வினாடிக்கு 177 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் நேற்று பிலுகுண்டு பகுதியை வந்தடைந்தது. அப்போது வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து 3 ஆயிரம் கன அடியானது. தொடர்ந்து பிலிகுண்டு பகுதிக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 100 அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்தடைந்து அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கலில் பரிசல் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் மற்றும் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் , மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தெங்குமரஹாடா உள்ளிட்ட மலைக் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர் சாகுபடியை கருத்தில் கொண்டு இன்று காலை நீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் நேற்று காலை 66.86 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 65.80 அடியாக குறைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

மேற்கு திசைச் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர்,காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, சென்னை , செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று (ஜூலை 26) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்யும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 26,  நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் . தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.

Tags: rainnewsweatherreportweathermetturdamdelta
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை இயக்குநர் பணியை நீட்டிக்க வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

Next Post

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் போட்டியிடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு…

Related News

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

புதுச்சேரி இண்டி கூட்டணியில் குழப்பம் – தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், முதலியார்பேட்டையில் திமுக எம்எல்ஏ மனுத்தாக்கல்!

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது – பிரதமர் மோடி

வடகொரியா நாடாளுமன்ற தேர்தல் – கிம் ஜாங் உன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

பாகிஸ்தானில் கடும் நிதிச்சுமை – தேசிய தின அணிவகுப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!

விமானப் பயணிகளுக்கு நிம்மதி – 60% இடங்களுக்கு இருக்கை தேர்வு கட்டணம் விதிக்கப்படாது என அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகிகள் பெரும்பாலான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் – அண்ணாமலை

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

காங்கிரஸில் இருந்து அசாம் மாநில எம்.பி. பிரத்யுத் பர்தோலோய் விலகல்!

ரயில்வே துறையில் அபார வளர்ச்சி – அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல்- மத்திய அரசு

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை சீரழித்த திமுக – அண்ணாமலை விமர்சனம்

கரூர் துயர சம்பவம்-செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies