மணிப்பூரில் மியான்மர் நாட்டவர்கள் கணக்கெடுப்பு -அம்மாநில அரசு உத்தரவு
Jan 14, 2026, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் மியான்மர் நாட்டவர்கள் கணக்கெடுப்பு -அம்மாநில அரசு உத்தரவு

Sivasubramanian P by Sivasubramanian P
Jul 30, 2023, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலத்தில் இன்னும் பதட்டமான சூழலே இருக்கும் நிலையில் சட்ட விரோதமாக மணிப்பூரில் தங்கியிருக்கும் மியான்மர் நாட்டு மக்களின் விவரங்களைக்  கணக்கெடுக்கும்  பணியை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணியை நிறைவு செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கலவரங்கள் வன்முறைகள் என மெய்டி மற்றும்  குகி பழங்குடி இனமக்களுக்கிடையே மோதல் நடந்து வந்தன.    மணிப்பூரில்  ‘மெய்தி’ இன மக்களே  பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்குப்  பழங்குடியின உரிமை  அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், இதற்கு குகி பழங்குடி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. வன்முறைக்கு  100 கக்கும் மேற்பட்டோர்  பலியாகி உள்ள நிலையில், பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

வன்முறை சம்பவங்களுக்கும் மியான்மர் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக மணிப்பூரில் குடியேறியவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்

மணிப்பூரில் சட்ட விரோதமாக இருக்கும் மியான்மர் நாட்டு மக்களின் அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்க  அம்மாநில அரசு அதிரடியாக உட்காரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து , மியான்மர் நாட்டு மக்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இந்தப் பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்ளும் மாநில அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவண அமைப்பில்  (NCRB) உள்ள ஒரு குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு மணிப்பூரின் அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக தங்யிருக்கும் மியான்மர் நாட்டு மக்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்க உள்ளது. மியான்மர் நாட்டவர்களின் பையோ மெட்ரிக் முறையில் சோதனை நடத்தி பதிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

மணிப்பூரில் வனங்கள் அழிப்பு மற்றும் வன்முறைகளுக்கும்  மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களே காரணம் என்று அம்மாநில முதல்வர் பிரேன்சிங் ஏற்கனவே குற்றச்சாட்டியிருந்தார். இந்த நிலையில் மணிப்பூர் அரசு மேற்கொள்ளும் இந்தப் பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ShareTweetSendShare
Previous Post

குறைந்த விலையில் விமான பயணம்

Next Post

ஊழலுக்கு எதிரான என்மண் என் மக்கள் பாதயாத்திரை 3ம் நாள் – அண்ணாமலையின் எழுச்சிப் பயணம்.

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies