மணிப்பூரில் மியான்மர் நாட்டவர்கள் கணக்கெடுப்பு -அம்மாநில அரசு உத்தரவு
Aug 29, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் மியான்மர் நாட்டவர்கள் கணக்கெடுப்பு -அம்மாநில அரசு உத்தரவு

Sivasubramanian P by Sivasubramanian P
Jul 30, 2023, 05:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மணிப்பூர் மாநிலத்தில் இன்னும் பதட்டமான சூழலே இருக்கும் நிலையில் சட்ட விரோதமாக மணிப்பூரில் தங்கியிருக்கும் மியான்மர் நாட்டு மக்களின் விவரங்களைக்  கணக்கெடுக்கும்  பணியை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணியை நிறைவு செய்யவும் திட்டமிடப் பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கலவரங்கள் வன்முறைகள் என மெய்டி மற்றும்  குகி பழங்குடி இனமக்களுக்கிடையே மோதல் நடந்து வந்தன.    மணிப்பூரில்  ‘மெய்தி’ இன மக்களே  பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்குப்  பழங்குடியின உரிமை  அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், இதற்கு குகி பழங்குடி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. வன்முறைக்கு  100 கக்கும் மேற்பட்டோர்  பலியாகி உள்ள நிலையில், பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

வன்முறை சம்பவங்களுக்கும் மியான்மர் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக மணிப்பூரில் குடியேறியவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்

மணிப்பூரில் சட்ட விரோதமாக இருக்கும் மியான்மர் நாட்டு மக்களின் அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்க  அம்மாநில அரசு அதிரடியாக உட்காரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து , மியான்மர் நாட்டு மக்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. இந்தப் பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்ளும் மாநில அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவண அமைப்பில்  (NCRB) உள்ள ஒரு குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு மணிப்பூரின் அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விரோதமாக தங்யிருக்கும் மியான்மர் நாட்டு மக்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்க உள்ளது. மியான்மர் நாட்டவர்களின் பையோ மெட்ரிக் முறையில் சோதனை நடத்தி பதிவு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

மணிப்பூரில் வனங்கள் அழிப்பு மற்றும் வன்முறைகளுக்கும்  மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களே காரணம் என்று அம்மாநில முதல்வர் பிரேன்சிங் ஏற்கனவே குற்றச்சாட்டியிருந்தார். இந்த நிலையில் மணிப்பூர் அரசு மேற்கொள்ளும் இந்தப் பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Share
Tweet
SendShare
Previous Post

குறைந்த விலையில் விமான பயணம்

Next Post

ஊழலுக்கு எதிரான என்மண் என் மக்கள் பாதயாத்திரை 3ம் நாள் – அண்ணாமலையின் எழுச்சிப் பயணம்.

Related News

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்து 93 லட்சம் கொள்ளை – 29 பேர் கைது!

சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு குறித்த தவெக எம்எல்ஏ-வின் பேச்சு : அதிமுக கண்டனம்!

4 நாள் அரசு முறைப்பயணம் – உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க இஸ்கானில் நடைபெற்ற வீடற்ற மக்களுக்கான உணவு வழங்கும்  நிகழ்ச்சி – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு!

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies