சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் இரயில் சேவை
Oct 26, 2025, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் இரயில் சேவை

Web Desk by Web Desk
Aug 1, 2023, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக இரயிலான “வந்தே பாரத்” இரயிலின் முதல் சேவையை 2019 பிப்ரவரி 2ஆம் தேதி தில்லி வாரணாசி இடையே தொடங்கப்பட்ட. இந்நிலையில் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் இரயில் 2023 ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை சென்ட்ரல் கோவை இடையே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் விதமாக சென்னை திருநெல்வேலிக்கு இடையே வந்தே பாரத் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இயக்கப்படலாம் என அறியப்படுகிறது. இதற்கான அதிகாரப் பூர்வமான தகவலை இன்று தென்மாவட்ட இரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

வந்தே பாரத் இரயில்களின் என்ஜினீன்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎப்பில் செய்யப்படுகிறது. இந்த வந்தே பாரத் இரயிலின் வேகம் புல்லட் இரயில் போல் இருக்கும். இதில் ஜிபிஎஸ் ட்ராக்கர் வசதி , கேமரா வசதி, ஏசி வசதி உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும், தொலைதூர ஊர்களுக்குச் செல்வதற்கு எப்போதும் உள்ள நேரத்தை விட குறைவான நேரத்தில் செல்லமுடியும்.  உதாரணமாக சென்னையில் இருந்து கோவை செல்ல இரயிலில் குறைந்தது 8 மணி நேரம் ஆகும் . ஆனால் வந்தே பாரத் இரயில் மூலம் 6 மணி நேரத்தில் போகலாம்.

இதன்மூலம் பயணிகளின் பயண நேரத்தை குறைக்க முடியும் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது.

தெற்கு இரயில்வே மண்டலத்தில் சென்னை – மைசூர் , சென்னை – கோவை , திருவனந்தபுரம் – காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது. அதைத் தொடர்ந்து நெல்லை – சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை போக்குவரத்து துறை அமைச்சர் எல் முருகன் வெளியிட்டுள்ளார். மற்றும் இதற்கான கால அட்டவனை ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. அதில் குறிப்பிட்ட படி இரயில் நெல்லையில் இருந்து காலை புறப்பட்டு மதியம் சென்னை சென்றுவிட்டு ,மதியம் சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு நெல்லை சேரும். இதன் மூலம் வந்தே பாரத் இரயிலின் பயண நேரத்தை 7 மணி நேரமாக குறைக்கமுடியும்.

நெல்லைக்கு விரைவில் வர இருக்கின்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கட்டணம் எவ்வளவு என்பது குறித்தான தகவல் தெரியவந்துள்ளது.

ஏசி சேர் கார் , எகானாமிக் சேர் கார் ஆகிய இரு வகுப்புகளில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஏசி சேர் கார் பயண கட்டணம் 3000 வரை இருக்கலாம் எனவும் எக்கனாமி சேர் கார் பயண கட்டணம் 1400 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை இருக்கலாம் என்றும் மற்றும் உணவும் சேர்த்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வந்தே பாரத் இரயில் சேவை திட்டம் நாடு முழுவதும் மக்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்து வருகிறார்.

மொத்தம் தமிழகத்தில் ஏழு வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் சென்னை – திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் இரயில் சேவை வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த இரயிலானது, திருச்சி – மதுரை இரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் இரயில் சென்னை சென்றடைய 10 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும். ஆனால் வந்தே பாரத் இரயில் மூலம் 8 மணி நேரத்திற்குள் சென்றடைய முடியும்.

வந்தே பாரத் இரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும் எனவும், அதேபோல் சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நேரம் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Tags: vandhebharathchennaitonellaivandhebharathexpress
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் வடகிழக்குப் பகுதி முன்னேற்றத்துக்கு 108 திட்டங்கள்- மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி

Next Post

9 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்… பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

Related News

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies