அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Jan 14, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பிறகு, நெஞ்சு வலி என்று கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததில் சட்ட விரோதம் இல்லை எனஅறும், சட்ட விரோதம் என்றும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, இவ்வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதி சட்ட விரோதம் இல்லை என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 26, 27-ம் தேதிகளில் நடைபெற்ற நிலையில், தங்களது தரப்பில் மேலும் வாதம் செய்ய வேண்டி இருப்பதால், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி, நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் முகுல் ரோத்தகி, “அமலாக்கத்துறை 5 நாட்களுக்கு மேல் போலீஸ் காவல் கோர அனுமதி இல்லை. மேலும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை தற்போதுதான் தேறி வருகிறது. ஆகவே, ஒரு நாளில் அவரிடம் சிறிது நேரம் மட்டுமே விசாரிக்கலாம் என்று வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனது வாதங்களை முன்வைக்க நாளை 1 மணி நேரம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

9 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்… பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

Next Post

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன்- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நீதிமன்றம்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies