அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Jul 21, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Murugesan M by Murugesan M
Aug 1, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பிறகு, நெஞ்சு வலி என்று கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததில் சட்ட விரோதம் இல்லை எனஅறும், சட்ட விரோதம் என்றும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, இவ்வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதி சட்ட விரோதம் இல்லை என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 26, 27-ம் தேதிகளில் நடைபெற்ற நிலையில், தங்களது தரப்பில் மேலும் வாதம் செய்ய வேண்டி இருப்பதால், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி, நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் முகுல் ரோத்தகி, “அமலாக்கத்துறை 5 நாட்களுக்கு மேல் போலீஸ் காவல் கோர அனுமதி இல்லை. மேலும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை தற்போதுதான் தேறி வருகிறது. ஆகவே, ஒரு நாளில் அவரிடம் சிறிது நேரம் மட்டுமே விசாரிக்கலாம் என்று வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தனது வாதங்களை முன்வைக்க நாளை 1 மணி நேரம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

9 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்… பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

Next Post

பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன்- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நீதிமன்றம்

Related News

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies