பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நீதிமன்றம், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. சமீபத்தில் மணிப்பூர் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்தை விமர்ச்சித்தகாக, 3 வழக்குகளில் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். கடந்த 22ம் தேதி, மணிப்பூர் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்தை விமர்ச்சித்து பேசியது, சர்ச்சைக்கு உள்ளானது.
இதையடுத்து, பத்ரி சேஷாத்ரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெரம்பலுாரைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு, குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை வந்த குன்னம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான குழு, பத்ரி சேஷாத்ரியைப், பெரம்பலுார் அழைத்து சென்று விசாரணைக்குப் பின் சிறையில் அடைத்தனர்.
ஜாமீன் கேட்டு குன்னம் நீதிமன்றத்தில் பத்ரி சேஷாத்ரி மனு தாக்கல்செய்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை, இன்று நீதிபதி கவிதா முன் விசாரணைக்கு வந்தது. பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கி அவர் உத்தரவிட்டார். இதற்கிடையே பத்ரி சேஷாத்ரியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு குன்னம் போலீசார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதற்கும் அனுமதி தர மறுத்து, அம்மனுவை நீதிபதி கவிதா தள்ளுபடி செய்தார்.