ஆடிப் பெருக்கின் சிறப்பு : கொண்டாட்டத்தின் காரணம் என்ன?..
Jan 14, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடிப் பெருக்கின் சிறப்பு : கொண்டாட்டத்தின் காரணம் என்ன?..

ஆடிப்பெருக்கு பண்டிகையின் சிறப்பம்சம்கள்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 3, 2023, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆடிப் பெருக்கு என்பது மனித குலத்திற்கு இயற்கை அளித்த கொடைகளில் ஒன்றான நீரின்  உயிர்நிலை பண்புகளைப் போற்றுகிறது. இந்நாளில் இயற்கையை, அன்னையாக  தெய்வ வடிவில் வழிபடப்படுகிறார்கள். இது மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய பெருங்கருணைக்கு நன்றி சொல்லும் விழாவாகும்.

ஆடி மாதம் , தமிழகத்தில் பருவமழையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பருவமழை காரணமாக, இந்த காலத்தில் ஆறுகளில் நீர்மட்டம் உயரும். எனவே ஆடி மாதம் விதைப்பு மற்றும் நடவு செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து வரும் காவிரி நதிக்கு நன்றித் தெரிவிக்கும் வகையிலும் ஆடிப்பெருக்கு ஆடி மாதத்தின் 18 ம் நாளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில்  தமிழகத்தின் அனைத்து வற்றாத நதிகளையும் வழிபடப்படுகின்றனர்.  தமிழகத்திற்கே  உரிய  ஒரு சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழில் ‘பதினெட்டு’ என்றால் ‘பெருக்கு’ மற்றும் ‘எழுச்சி’ என்று பொருள்.  அதனால் ஆடிப் பெருக்கு ‘பதினெட்டுப் பெருக்கு’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீர் வைபவம்   பெரும்பாலும் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆடிப் பெருக்கு சடங்குகள்:

ஆடிப்பெருக்கு நன்னாளில் பெண்கள் பார்வதி தேவியை வழிபடுகின்றனர். பல்வேறு வகையான அரிசி உணவுகள் தயாரிக்கப்பட்டு அம்மனுக்கு நைவேதியமாக  தேங்காய் சாதம், இனிப்புப் பொங்கல், தயிர் சாதம், பஹலா சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதம் போன்றவை வைக்கப்ப்படுகிறது. அம்மனை வணங்கிய பின் அக்ஷதை,மலர்கள்  தூவி புண்ணிய நதிகளில் சிறந்த காவிரித் தாயை  வழிபடுகின்றனர்.

இந்த புனித நாளில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டாக சேர்ந்து தண்ணீர் இடைவிடாத பெருக்கெடுத்து ஓட பிரார்த்தனை செய்கிறார்கள். இறுதியில் நல்ல அறுவடைக்கு வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.

பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி, புது ஆடைகள் அணிந்து, காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள குளித்தலையில் மரபு சார்ந்த சடங்குகளைச்  செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து காவேரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள்  நடைபெறுகிறது.

பின்னர், வெல்லம் மற்றும் அரிசி மாவைப் பயன்படுத்திச்  சிறப்பு விளக்கு தயாரிக்கப்படுகிறது.  மா இலைகளில் தீபம் ஏற்றப்பட்டு, அதில் மஞ்சள் நூல், மஞ்சள் பூக்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த தீபம் ஆற்றில் மிதக்க விடுகின்றனர்.
ஆடிப் பெருக்கின் போது ‘கலந்த சாதம்’ எனப்படும் சிறப்பு சாதம் தயாரிக்கப்படுகிறது. அதனைப்  பூஜை முடிந்ததும், பக்தர்கள் குடும்பத்துடன் ஆற்றங்கரையில் விருந்து உண்பார்கள். அன்றைய முழு நாளும் காவிரி ஆற்றங்கரை ஒரு சுற்றுலாத் தலமாக மாறிவிடும்.

இளம் பெண்களும் திருமணமான பெண்களுடன் இணைந்து இந்த மங்கள பூஜையை அனுசரிப்பார்கள். அப்போது காப்பரிசி (வெல்லம் மற்றும் கைக்குத்தல் அரிசியால் செய்யப்பட்ட இனிப்பு), கருகமணி (கருப்பு நிற மணிகள்), காதோலை (பனை ஓலைகளால் செதுக்கப்பட்ட காதணிகள்) ஆகியவற்றை பிரசாதமாக வழங்கும் கன்னிப் பெண்கள் நல்ல கணவர்களைப் பெறுவார்கள் என்பது பிரபலமான நம்பிக்கை. ஆடிப் பெருக்கு விழாவில் இளம்பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களுக்கு இசைவாக ஆடுகிறார்கள்.

Tags: adi18Kaviri | காவேரிஆடிபெருக்குஆடி மாதம்ஆடி 18Kaveriகாவிரிaadiperukku
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி வழக்கு: தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி!

Next Post

கோடி நன்மைகளை வாரி வழங்கும் ஆடிப்பெருக்கு !!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies