ஞானவாபி மசூதியில் 3-வது நாளாக தொடரும் தொல்லியல் ஆய்வு!
Sep 10, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதியில் 3-வது நாளாக தொடரும் தொல்லியல் ஆய்வு!

Web Desk by Web Desk
Aug 6, 2023, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதியில் 3-வது நாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரே ஞானவாபி மசூதி உள்ளது. இது இந்து கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று நீண்ட காலமாகவே இந்துக்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, இந்து பெண்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி கோர்ட் உத்தரவிட்டது. அப்போது, மசூதிக்குள்ளே சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சிவலிங்கத்தின் காலத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்துக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு மசூதி தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், தொல்லியல் துறை ஆய்வுக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையும் எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன்படி, உச்ச நீதிமன்றமும் ஜூலை 26-ம் தேதி வரை ஆய்வு நடத்த தடை விதித்ததோடு, அலகபாத் உயர் நீதிமன்றத்தை நாடும்படி அறிவுறுத்தியது.

மசூதி தரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, தொல்லியல் துறை ஆய்வுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 4-ம் தேதி முதல் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கும் தடைக் கோரி, மசூதி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். ஆனால், தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதைத் தொடர்ந்து, 3-வது நாளாக ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வைத் தொடர்ந்து வருகின்றனர்.

Tags: gnanavapignanavapi masqueSivan templeShiva temple
ShareTweetSendShare
Previous Post

யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்!

Next Post

ரஷ்யா – உக்ரைன் போர்: நிரந்தர தீர்வு காண இந்தியா தயார் – அஜித் தோவல் உறுதி!

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies