ரஷ்யா – உக்ரைன் போர்: நிரந்தர தீர்வு காண இந்தியா தயார் - அஜித் தோவல் உறுதி!
Sep 13, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போர்: நிரந்தர தீர்வு காண இந்தியா தயார் – அஜித் தோவல் உறுதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 6, 2023, 01:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யா – உக்ரைன் இடையே நடக்கும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இதைவிட வேறு எதுவும் இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தராது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது. போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றன. ஆகவே, போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை உலக நாடுகள் ஒருகிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உக்ரைன் போர் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் 40 நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றிருக்கிறார்.

இம்மாநாட்டில் நேற்றைய நிகழ்வின்போது பேசிய அஜித் தோவல், “ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இதைவிட இந்தியாவுக்கு வேறு எதுவும் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்காது. இரு நாடுகளுக்கும் இடையை போர் தொடங்கியதில் இருந்தே இந்தியா உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும், அதன் அண்டை நாடுகளுக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது.

இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் இராஜதந்திரத்தை ஊக்குவிப்பதாகவே இருக்கும். இதுதான் அமைதியை நோக்கி முன்னோக்கிச் செல்லும் வழியாகும். போர் தொடர்பாக பல சமாதான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு விஷயத்தில் சில சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இவை இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஆகவே, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தீர்வுகளை காண வேண்டும். அதற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்” என்று கூறியிருக்கிறார்.

Tags: russiaajit dovalUkraineRussia Ukraine war
Share
Tweet
SendShare
Previous Post

ஞானவாபி மசூதியில் 3-வது நாளாக தொடரும் தொல்லியல் ஆய்வு!

Next Post

தீவிரவாதிகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை பதிலடி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies