ஆளுநர் மாளிகை தர்பார் அறை என்ற பதவியேற்பு அரங்கம் சுப்ரமணிய பாரதியார் மண்டபம் எனப் பெயர் மாற்றம் செய்து கல்வெட்டைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதி போன்ற முக்கிய பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த தர்பார் அறைக்கு, “மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம்” என புதிய பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிகழச்சியில் கலந்து கொண்டு பாரதியாரின் பெயரை அந்த அரங்கிற்குச் சூட்டினார். பின்னர் மகாகவி பாரதியாரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அமைச்சர்கள், இசை அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.