செந்தில் பாலாஜி வழக்கு: எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? உச்ச நீதிமன்றம் காட்டம்!
Oct 3, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு: எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? உச்ச நீதிமன்றம் காட்டம்!

Web Desk by Web Desk
Aug 8, 2023, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை முடிக்க எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பதோடு, தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்து சம்மன் அனுப்பி இருக்கிறது.

2011 முதல் 2016 வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமானோரிடம் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக, செந்தில் பாலாஜியிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்த சென்னையைச் சேர்ந்த 2 பேர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நடந்து வருகிறது.

இந்த வழக்கை கடந்த மே மாதம் 16-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, இராமசுப்பிரமணியின் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இந்த சூழலில்,இந்த சூழலில் செந்தில் பாலாஜி பயண மோசடி வழக்கில் விசாரணையை நடத்த மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இன்னும் எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள்? 6 மாத காலமெல்லாம் அவகாசம் தர முடியாது. குறைந்தபட்ச கால அவகாசம் தான் தர முடியும். எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரில் வந்து கேட்கட்டும் என்று காட்டமாகக் கூறினர்.

பின்னர், தொடர்ந்து நடந்த விசாரணையின் போது செப்டம்பர் 20-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், தவறினால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், காவல்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகும் உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.

Tags: senthil balaji dmksenthil balaji arrestit raids senthil balajisenthil balaji house it raidSenthil Balajisenthil balaji speechsenthil balaji casesenthil balaji latest newssenthil balaji newssenthil balaji new housedmk senthil balajiminister senthil balaji
ShareTweetSendShare
Previous Post

பாஜக அலுவலகத்தில் இருந்த பாரத அன்னையின் சிலை தமிழக காவல் துறையினால் அகற்றம்.

Next Post

ராகுல் காந்தியால் ஒருபோதும் சாவர்க்கர் ஆக முடியாது: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு!

Related News

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies