குற்றப்பத்திரிக்கை கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி புதிய மனு!
Oct 6, 2025, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்றப்பத்திரிக்கை கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி புதிய மனு!

Web Desk by Web Desk
Aug 14, 2023, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கக் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக் குமாருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், இருவருமே ஆஜராகாத நிலையில், கடந்த மாதம் 13-ம் தேதி செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, மறுநாள் அதிகாலை செந்தில் பாலாஜியை கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை கடந்த 7-ம் தேதி இரவு காவலில் எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 12-ம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், அன்றையதினம் மாலை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியை 25-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், கரூர் இராம் நகரில் புதிதாக கட்டிவரும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது, 25 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு பத்திரப் பதிவு செய்தது தொடர்பாக, அவரது மனைவி நிர்மலா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சம்மனை ஒட்டி விட்டுச் சென்றனர்.

இது ஒருபுறம் இருக்க, செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இழுத்தடித்து வந்தார். ஆகவே, அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை தேடி வந்தனர். இந்த சூழலில், கேரள மாநிலம் கொச்சியில் அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கிறார். அவரிடம் சட்ட விரோத பணப் பரிமாற்றம், 25 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை வெறும் 10 லட்சம் ரூபாய்க்கு பத்திரப் பதிவு செய்தது உள்ளிட்டவை தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அம்மனுவில், அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை, கைது, மெமோ உள்ளிட்ட ஆவணங்களை வழங்குமாறு கோரப்பட்டிருக்கிறது. இம்மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, மேற்கண்ட ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார். ஆகவே, மேற்கண்ட ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு விரைவில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

Tags: dmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

சிம்லாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

Next Post

குழந்தைகளிடம் நேர்மறையான எண்ணங்களை விதைப்போம்- அண்ணாமலை

Related News

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

ஜெய்ப்பூர் : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 8 நோயாளிகள் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

தமிழகத்தில் அக்.9 வரை கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

மறைந்த பாஜக மாவட்ட தலைவரின் உருவ படத்திற்கு எல்.முருகன் மரியாதை!

உலகின் குருவாக இந்தியா திகழவேண்டும் என்பதே நோக்கம் – ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக இணைச்செயலாளர்

மேற்கு வங்கத்தில் கனமழை!

கரூர் : விஜய் பிரசார வாகன ஓட்டுநர், இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

ரோகித் கேப்டனாக நியமிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது – ஹர்பஜன் சிங்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தமிழக அரசு கேபிள் டிவியில் தமிழ் தொலைக்காட்சிகள் இடம்பெறுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது – பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies