சிம்லாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!
Apr 20, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிம்லாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்திருப்தாக, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, இமாச்சல் பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் சோலான் பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில், 7 பேர் உயிரிழந்தனர். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலரை காணவில்லை. அதேபோல், கனமழை காரணமாக, சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், சம்மன் ஹில் பகுதியில் இருந்த சிவன் கோவில் இடிந்து விழுந்தது. இதில், பலரும் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், நிலச்சரிவால் இமாச்சல் பிரதேசத்தில் 751 சாலைகள் முடங்கிப் போய் இருக்கின்றன. இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “நிலச்சரிவில் 25 பேர் வரை சிக்கி இருக்கலாம் எனத் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கவும். ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கோ, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கோ செல்ல வேண்டாம். மழை நின்ற பிறகு, மீட்புப் பணிகள் நடைபெறும்” என்றார்.

கனமழை காரணமாக, மாண்டி, சிம்லா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், இமாச்சல் பிரதேச மாநிலத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பை கிரிக்கெட் நுழைவுச் சீட்டு விற்பனை எப்போது?

Next Post

குற்றப்பத்திரிக்கை கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி புதிய மனு!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies