ஒடிசா மாநிலம் சந்திபூரில் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
வானிலிருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்வாய்ந்த ருத்ரம்-2 ஏவுகணை, எதிரி நாடுகளின் ரேடியோ அலைவரிசை மற்றும் ரேடார் சிக்னல்களை 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே கண்டறியும் திறன் கொண்டது.
ஒடிசா மாநிலம் சந்திபூரிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, குறித்த நேரத்தில் இலக்கை தாக்கியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. ருத்ரம்-2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
















