முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என அக்கட்சியின் தொண்டர் ஒருவர் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தாயார் சரஸ்வதி அம்மாள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதை முன்னிட்டு அவரது இல்லத்திற்கு துக்கம் விசாரிக்க வந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை பார்த்து அதிமுக தொண்டர் ஒருவர் துரோகி என்று சத்தம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த பொள்ளாச்சி ஜெயராமன் கண்டிக்க மற்ற தொண்டர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
















