சேலத்திலிருந்து பெங்களூருக்கு இயக்க வேண்டிய ஒன்பது அரசு பேருந்துகள் பழுதடைந்த நிலையில் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்திலிருந்து பெங்களூருக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஒன்பது அரசு பேருந்துகள் பழுதடைந்த நிலையில் உதிரி பாகங்கள் இல்லாததால் அஸ்தம்பட்டி பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்தை பெங்களூரு வழித்தடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஓட்டுநர், நடத்துனர்கள் சுமார் 18 பேர் காத்திருந்தனர்.
இதுகுறித்து கிளை மேலாளர் செல்வகுமாரிடம் தமிழ்ஜனம் செய்தியாளர் விளக்கம் கேட்டபோது பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என அலட்சியமாக பதிலளித்தார்.
நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்க வேண்டிய பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















