உலகக் கோப்பை கிரிக்கெட் நுழைவுச் சீட்டு விற்பனை எப்போது?
Apr 20, 2026, 12:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் நுழைவுச் சீட்டு விற்பனை எப்போது?

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டு வருகிற 25-ம் தேதி இணையதளத்தில் விற்பனை தொடங்குகிறது. அன்றைய நாளே, இந்திய அணி அல்லாத மற்ற அணிகளின் ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான நுழைவுச் சீட்டு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.  இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்தியா முழுக்க நவராத்திரி விழாவைக் கோலாகலமாகக் கொண்டாட தயாராகி வரும் இந்த சூழ்நிலையில், நவராத்திரி தொடங்கும் அக்டோபர் 15ம் தேதி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணி மோதும் என அறிவிக்கப்பட்டது. அதனால், விளையாட்டு நிகழ்ச்சிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க  முடியாது என காவல் துறை தரப்பில் தேதி மாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து, திருத்தப்பட்ட புதிய அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. ஆனால் போட்டி நடக்கும் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அட்டவணைப்படி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்டோபர் 15ம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை அதே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், போட்டிக்கான நுழைவு சீட்டுக்கு விற்பனைக்கான தேதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது. இதன்படி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை மைதானத்தில் காண இணையத்தில் நுழைவு சீட்டு விற்பனை வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது

மேலும், நுழைவுச் சீட்டு கிடைக்க கூடுதல் வாய்ப்பாக இருக்க https://www.cricketworldcup.com/register என்ற இணைய பக்கத்தில் பதிவு செய்யலாம். இதில் பதிவு செய்வதன் மூலமாக விற்பனை தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: CricketICC World CupAsia cup cricket 2023world Cup CricketWorld Cup
ShareTweetSendShare
Previous Post

தனது இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

Next Post

சிம்லாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies