16 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், உயர்கல்வித்துறை செயலாளராக ராஷ்மி சித்தார்த்தையும்,
நில சீர்திருத்தத்துறை செயலாளராக ஹர் சஹாய் மீனாவையும் நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கரூர் மாநகராட்சி ஆணையராக பிரத்விராஜும், சென்னை மாநகராட்சி இணை ஆணையராக சரவணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து,பால்வளத்துறை ஆணையராக அஜித் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி ஆட்சியராக ரஞ்சித் சிங்கும், திண்டுக்கல் ஆட்சியராக துர்கா மூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக தீபனா விஸ்வேஸ்வரியை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தேனி மாவட்ட ஊரக மேம்பாட்டு ஆணையராக ரஜத் பீட்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
















