புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தின் சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அலுவலகத்தில் இருந்த சி.விஜயபாஸ்கரின் புகைப்படம் அகற்றப்பட்டது.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். அத்துடன், புதிய மாவட்ட செயலாளர்களையும் அறிவித்தார். அதன்படி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சி.விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு, புதிய மாவட்ட செயலாளராக பழனிவேலை நியமித்தார்.
புதிய மாவட்ட செயலாளர் பழனிவேலுக்கு எதிராக சி.விஜயபாஸ்கர் தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டதால் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, அதிமுக புதிய மாவட்ட செயலாளரிடம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், மேளதாளங்களுடன் தொண்டர்கள் புடை சூழ வருகை தந்த புதிய மாவட்ட செயலாளர் பழனிவேல் அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது, அலுவலகத்தில் இருந்த சி.விஜயபாஸ்கரின் புகைப்படம் பொறித்த பேனரை அதிமுகவினர் கிழித்து அகற்றினர்.
இதனிடையே அலுவலக சாவியை பெருந்தன்மையுடன் ஒப்படைத்தாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
















