இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!
Sep 14, 2026, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 08:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையில், இந்தியத்  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில், ஒரு அசாதாரண அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியத் தலைமை நீதிபதியாக இருப்பவர் டி.ஒய்.சந்திரசூட். இவரது பெயரில் சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இந்திய ஜனநாயகம், உச்ச நீதிமன்றம் ஜிந்தாபாத் என்று தொடங்கும் அப்பதிவில், “இந்திய அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். ஆனால், இதற்கு மக்களாகிய உங்களது ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்.

ஆகவே, மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அரசிடம் உரிமைகளைக் கேட்டு வீதியில் இறங்கிப் போராடுங்கள். இந்தச் சர்வாதிகார அரசு, மக்களைப் பயமுறுத்தும், அச்சுறுத்தும். ஆனால், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். தைரியமாக அரசிடம் கணக்குக் கேளுங்கள். தவறைத் தட்டிக் கேளுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தப் பதிவில், தலைமை நீதிபதி சந்திரசூட்டின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இப்பதிவு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டு வருகிறது. எனினும், இது போலியான பதிவு என்றும், இப்படியொரு பதிவை தலைமை நீதிபதி வெளியிடவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் அதுல் குர்ஹேகர் மற்றும் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய துஷார் மேத்தா, “இது ஒரு போலியான பதிவு. எந்த தலைமை நீதிபதியும், மத்திய அரசுக்கு எதிராக இதுபோன்றதொரு செயலை செய்ய மாட்டார்கள். அதிலும், தலைமை நீதிபதி சந்திரசூட் மிகவும் புத்திசாலி. ஆகவே, இப்படியொரு செயலை அவர் செய்திருக்க மாட்டார். தவிர, நீதியரசரின் பெயரால் இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags: supreme court chief justice chandrachudsupreme court
Share
Tweet
SendShare
Previous Post

சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்- மத்திய அரசு அறிவிப்பு

Next Post

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!

Related News

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies