இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!
Apr 29, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையில், இந்தியத்  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில், ஒரு அசாதாரண அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியத் தலைமை நீதிபதியாக இருப்பவர் டி.ஒய்.சந்திரசூட். இவரது பெயரில் சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இந்திய ஜனநாயகம், உச்ச நீதிமன்றம் ஜிந்தாபாத் என்று தொடங்கும் அப்பதிவில், “இந்திய அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். ஆனால், இதற்கு மக்களாகிய உங்களது ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்.

ஆகவே, மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அரசிடம் உரிமைகளைக் கேட்டு வீதியில் இறங்கிப் போராடுங்கள். இந்தச் சர்வாதிகார அரசு, மக்களைப் பயமுறுத்தும், அச்சுறுத்தும். ஆனால், நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். தைரியமாக அரசிடம் கணக்குக் கேளுங்கள். தவறைத் தட்டிக் கேளுங்கள். உங்களுடன் நான் இருக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தப் பதிவில், தலைமை நீதிபதி சந்திரசூட்டின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இப்பதிவு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டு வருகிறது. எனினும், இது போலியான பதிவு என்றும், இப்படியொரு பதிவை தலைமை நீதிபதி வெளியிடவில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் அதுல் குர்ஹேகர் மற்றும் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய துஷார் மேத்தா, “இது ஒரு போலியான பதிவு. எந்த தலைமை நீதிபதியும், மத்திய அரசுக்கு எதிராக இதுபோன்றதொரு செயலை செய்ய மாட்டார்கள். அதிலும், தலைமை நீதிபதி சந்திரசூட் மிகவும் புத்திசாலி. ஆகவே, இப்படியொரு செயலை அவர் செய்திருக்க மாட்டார். தவிர, நீதியரசரின் பெயரால் இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags: supreme court chief justice chandrachudsupreme court
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்- மத்திய அரசு அறிவிப்பு

Next Post

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies