வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!
Sep 14, 2026, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 08:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி இளங்கோவன் விலகி இருக்கிறார். வேறு நீதிபதிக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தி.மு.க. அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வருபவர் செந்தில் பாலாஜி. தற்போது, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர், கடந்த 2011 – 16 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவிசாரணை நடந்து வருகிறது. பண மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்துக் குவிப்பு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் தனித் தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வீட்டுக்கு சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், தி.மு.க.வினரும் தாக்குதல் நடத்தியதோடு, அதிகாரிகள் சென்ற காரின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதில் காயமடைந்த அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணை வந்தது. ஆனால், மேற்கண்ட வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி இளங்கோவன், இவ்வழக்கிலிருந்தும் விலகி இருக்கிறார். இதையடுத்து, இவ்வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Tags: dmk senthil balajiMadurai high court
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!

Next Post

5 மாநில பிஎப்ஐ நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies