வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!
Jan 18, 2026, 10:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 14, 2023, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி இளங்கோவன் விலகி இருக்கிறார். வேறு நீதிபதிக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தி.மு.க. அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வருபவர் செந்தில் பாலாஜி. தற்போது, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர், கடந்த 2011 – 16 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவிசாரணை நடந்து வருகிறது. பண மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்துக் குவிப்பு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் தனித் தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வீட்டுக்கு சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், தி.மு.க.வினரும் தாக்குதல் நடத்தியதோடு, அதிகாரிகள் சென்ற காரின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதில் காயமடைந்த அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணை வந்தது. ஆனால், மேற்கண்ட வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி இளங்கோவன், இவ்வழக்கிலிருந்தும் விலகி இருக்கிறார். இதையடுத்து, இவ்வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Tags: dmk senthil balajiMadurai high court
ShareTweetSendShare
Previous Post

இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!

Next Post

5 மாநில பிஎப்ஐ நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை

Related News

பொங்கல் பண்டிகை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறு ஊடல் விழா கோலாகலம்!

குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு – அதிமுகவினருக்கு இடம் கொடுக்காமல் மேடையைஆக்கிரமித்த திமுகவினர்!

தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் – பழ. கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஆளுநருடன் எஸ்.ஜி.சூர்யா சந்திப்பு – ஊடக விவாத மோதல் தொடர்பான வீடியோ ஆதாரத்தை அளித்துள்ளதாக பேட்டி!

பிரதமரின் தமிழக பயணம் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – எல்.முருகன்

காசி தமிழ் சங்கமம் அனுபவம் குறித்து பிரதமருக்கு கடிதம் – மாணவனை பாராட்டிய மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22 கோடி அபராதம் – மத்திய அரசு நடவடிக்கை!

வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த இந்து இளைஞர் கார் ஏற்றி கொலை!

உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

அசாம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு – கவுகாத்தியில் பகுரும்பா த்வோ கலாச்சார விழாவை கண்டு ரசித்த மோடி!

காணும் பொங்கல் கோலாகலம் – திருவண்ணாமலை அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி!

தமிழகம் முழுவதும் களைகட்டிய காணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்!

6 அமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு – ராகுல் காந்தியிடம் வலியுறுத்திய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்!

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் – நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆய்வு!

புவிசார் அரசியலில் புதுப்பாதை – இந்தியாவுடன் நெருக்கத்தை விரும்பும் ஜெர்மனி!

அமெரிக்கா கையில் வெனிசுலா – சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை மாறும் புவிசார் அரசியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies