சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்- மத்திய அரசு அறிவிப்பு
Jun 14, 2026, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்கள்- மத்திய அரசு அறிவிப்பு

Murugesan M by Murugesan M
Aug 14, 2023, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திர தின 2023 சுதந்திர தினத்தையொட்டி 954 காவல்துறை பணியாளர்களுக்கு காவல்துறை பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
வீர தீர செயல்களுக்கான  குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் சிஆர்.பிஎப் வீரர் ஒருவருக்கும்,  வீர தீர செயல்களுக்கான காவல் பதக்கங்கள்  229 பேருக்கும், மிகவும் சிறப்பு மிக்க குறிப்பிடத்தக்க  சேவைக்கான காவல் பதக்கங்கள் 82 பேருக்கும், சிறந்த சேவைக்கான காவல் பதக்கம்  642 பேருக்கும் வழங்கபட உள்ளது.

வீர தீர செயல்களுக்கான காவல் பதக்கம் விருது பெறும் 230 பணியாளர்களில் 125 பணியாளர்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 71 பணியாளர்கள், வடகிழக்குப் பிராந்தியத்தைச்சேர்ந்த 11 பணியாளர்களுக்கு வீர தீர செயல்களுக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
வீர தீர செயல்களுக்கான விருதுகளை பெறும் பணியாளர்களில் சிஆர்பிஎப்- சேர்ந்த 28 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 33 பேர், ஜம்மு காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த  55 பேர், சத்தீஷ்கரைச் சேர்ந்த 24 பேர், தெலங்கானாவைச் சேர்ந்த 22 பேர், ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 18 பேர் இடம்பெற்றுள்ளனர். மற்றவர்கள் இதர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுதல், குற்றத்தைத் தடுப்பது அல்லது குற்றவாளிகளைக் கைது செய்தல் ஆகியவற்றில் வெளிப்படையான வீரத்தின் அடிப்படையில் வீரத்திற்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம், மிகவும் சிறப்பு மிக்க குறிப்பிடத்தக்க  சேவைக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. குடியரசுத் தலைவரின் சிறப்பான சேவைக்கான காவல் பதக்கம், காவல் துறை சேவையில் சிறப்பான சாதனைக்காகவும், திறமையான சேவைக்கான காவல் பதக்கம், கடமையில் அர்ப்பணிப்புடன் கூடிய மதிப்புமிக்க சேவைக்காகவும் வழங்கப்படுகின்றது.

தமிழ்நாட்டின் பெருநகர சென்னையில் காவல் துறை துணை ஆணையர் திரு எஸ். அரவிந்த், தமிழ்நாட்டின் தருமபுரியைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு என். ஸ்டீபன் ஜேசுபதம், தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு பி தங்கதுரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை உதவி ஆய்வாளர் திரு எஸ். அனந்தராமன், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு என் பாலசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த  காவல் துறை துணை ஆய்வாளர் திரு ஹெச். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாட்டின் பெரம்பலூர் காவல் துறை கூடுதல் ஆய்வாளர் திரு மதியழகன்,  தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு ஜெ. ராஜூவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை உதவி ஆணையர் திரு எஸ். சங்கரலிங்கம், தமிழ்நாட்டின் திருச்சி நகரைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு இ.இளங்கோவன் ஜென்னிங்ஸ், தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த  காவல் துறை ஆய்வாளர் திரு எம். ரவீந்திரன், தமிழ்நாட்டின் பெருநகர சென்னையைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு ஏ. சிவ ஆனந்த், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த காவல் துறை, ஆய்வாளர்  திரு டி. திருமலை கொழுந்து, தமிழ்நாட்டின் திருப்பூரைச் சேர்ந்த சிறப்புப்பிரிவு காவல் துறை ஆய்வாளர், திரு. எஸ் முத்துமலை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு எம். புகழ்மாறன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு டி. மாரியப்பன், தமிழ்நாட்டின் பெருநகர சென்னையைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் திரு ஆர் கமலக்கண்ணன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த காவல் துறை துணை ஆய்வாளர் திரு எஸ். தனபாலன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த பெண் காவல் துறை துணை ஆய்வாளர் திருமதி எஸ் செண்பகவள்ளி ஆகியோருக்கு சிறந்த  சேவைக்கான காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: award policepolice award
ShareTweetSendShare
Previous Post

ஃபிபா ஒலிம்பிக்: ஆட்டமிழக்காமல் தொடரும் இந்தியா கூடைப்பந்து அணி.

Next Post

இந்திய தலைமை நீதிபதி பெயரில் போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களில் வைரலாவதால் பரபரப்பு!

Related News

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies