சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 4வது முறையாக தூரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தற்போது 153கிமீ x 163 கி.மீ என்ற அளவில் சுற்றி வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தில் நாளை ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூலைப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் -3 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த, ஜூலை 14ல், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி, புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து சந்திரயான்- 3 விண்கலம், நிலவு சுற்று வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்தது. இதைத் தொடர்ந்து, சந்திரயான் -3 நிலவு சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. இந்நிலையில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தில் தூரம் 4வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டது.
இது குறித்து இஸ்ரோ தனது எக்ஸ் (டிவிட்டர்) பதிவில்,
நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தில் தூரம் 4வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் தற்போது 153கிமீ x 163 கி.மீ என்ற அளவில் சந்திரயான்-3 விண்கலம் சுற்றி வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தின் ப்ராபல்ஷன் மாட்யூல் மற்றும் லேண்டர் மாட்யூல் ஆகியவை தனித்தனியே பிரித்து செயல்பட தயாராகி வருகிறது.
Chandrayaan-3 Mission:
Today’s successful firing, needed for a short duration, has put Chandrayaan-3 into an orbit of 153 km x 163 km, as intended.
With this, the lunar bound maneuvres are completed.
It’s time for preparations as the Propulsion Module and the Lander Module… pic.twitter.com/0Iwi8GrgVR
— ISRO (@isro) August 16, 2023
சந்திரயான்-3 விண்கலத்தில் நாளை ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூலைப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயானின் லேண்டர் 30 கி.மீ. உயரத்துக்கு செல்லும். ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயானின் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அதன் படி, ஆகஸ்ட் 23ம் தேதி விண்கலம் சுமந்து சென்றுள்ள, ‘லேண்டர்’ எனப்படும் தரையிறங்கும் சாதனம் அதில் இருந்து நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. லேண்டர் சாதனத்துக்குள் உள்ள, ‘ரோவர்’ எனப்படும் வாகனம், நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்கிடையே நாளை(ஆகஸ்ட் 17) அடுத்த சுற்றுவட்டப்பாதையில் தூரம் குறைக்கும் பணி நடக்கிறது.