'எனது வங்கம், போதையில்லா வங்கம்' பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்- குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு
Jan 14, 2026, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘எனது வங்கம், போதையில்லா வங்கம்’ பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்- குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு

ஆன்மீக விழிப்புணர்வு, மருந்து, சமூக ஒருமைப்பாடு,  அரசியல் உறுதி ஆகியவற்றின் மூலம் போதை இல்லா நிலைமை மாற்ற முடியும்- குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு

Murugesan M by Murugesan M
Aug 17, 2023, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ திட்டத்தின் கீழ்  ‘எனது வங்கம், போதையில்லா வங்கம்’ பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு இன்று ஆகஸ்ட் 17 கொல்கத்தா ஆளுநர் மாளிகையில்  தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, போதைப்பொருளைப் பயன்படுத்துவதால்   சமூகத்திற்கும் நாட்டிற்கும் தீங்கு ஏற்படுகிறது.  இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதால், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியான பாதையைத்  தேர்வு செய்ய முடிவதில்லை. இது மிகவும் கவலைக்குரியது. இதனை மாற்ற அனைத்து நிலைகளிலும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆன்மீக விழிப்புணர்வு, மருந்து, சமூக ஒருமைப்பாடு,  அரசியல் உறுதி ஆகியவற்றின் மூலமே இந்த நிலைமையை மாற்ற முடியும்.

மன அழுத்தம் மற்றும் மற்றவர்களின் வற்புறுத்தல்  காரணமாக போதைப்பழக்கம் உருவாகிறது. போதைக்கு அடிமையாவதால், ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். வேறு பல்வேறு நோய்களும் இதிலிருந்து உருவாகின்றன. போதைக்கு அடிமையானவர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். போதைப் பழக்கத்திற்கு அடிமையான நண்பரின் குடும்பத்தினரின்,  கவனத்திற்கு அனைத்து இளைஞர்களும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

போதைப்பொருளை உட்கொண்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த . ஏதேனும் மன அழுத்தத்தில் இருந்தால், அவர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், ஏதேனும் சமூக அமைப்புடன் பேச வேண்டும்.
நமது மன உறுதியால் எதிர்கொள்ள முடியாத பிரச்சனை எதுவும் இல்லை.  போதைப்பொருள் பயன்படுத்துதல்  மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாவதை சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றார். போதைப் பொருள் வாங்குவதற்காக செலவிடப்படும் பணம் குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. போதைக்கு அடிமையானவர்கள், தங்கள் சொந்த நன்மைக்காகவும், சமூகம் மற்றும் நாட்டின் நலனுக்காகவும் இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து வெளியே வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இளைஞர்களே நமது  மிக முக்கியமான சொத்துக்கள். அவர்கள் தங்கள் எதிர்காலத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த செலவிட வேண்டிய நேரமும் ஆற்றலும், போதை காரணமாக வீணடிக்கப்படுகிறது. மாணவர்கள் தவறான திசையில் செல்கிறார்களா என்பதைக் கல்வி நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். தவறு நடப்பது தெரியவந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

திமுக குமரி மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது- அண்ணாமலை 

Next Post

மக்களின் பார்வைக்கு தாஜ்மகாலில் உலகக்கோப்பை !

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies