'எனது வங்கம், போதையில்லா வங்கம்' பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்- குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு
Apr 20, 2026, 05:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘எனது வங்கம், போதையில்லா வங்கம்’ பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்- குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு

ஆன்மீக விழிப்புணர்வு, மருந்து, சமூக ஒருமைப்பாடு,  அரசியல் உறுதி ஆகியவற்றின் மூலம் போதை இல்லா நிலைமை மாற்ற முடியும்- குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு

Murugesan M by Murugesan M
Aug 17, 2023, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ திட்டத்தின் கீழ்  ‘எனது வங்கம், போதையில்லா வங்கம்’ பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு இன்று ஆகஸ்ட் 17 கொல்கத்தா ஆளுநர் மாளிகையில்  தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, போதைப்பொருளைப் பயன்படுத்துவதால்   சமூகத்திற்கும் நாட்டிற்கும் தீங்கு ஏற்படுகிறது.  இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதால், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியான பாதையைத்  தேர்வு செய்ய முடிவதில்லை. இது மிகவும் கவலைக்குரியது. இதனை மாற்ற அனைத்து நிலைகளிலும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆன்மீக விழிப்புணர்வு, மருந்து, சமூக ஒருமைப்பாடு,  அரசியல் உறுதி ஆகியவற்றின் மூலமே இந்த நிலைமையை மாற்ற முடியும்.

மன அழுத்தம் மற்றும் மற்றவர்களின் வற்புறுத்தல்  காரணமாக போதைப்பழக்கம் உருவாகிறது. போதைக்கு அடிமையாவதால், ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். வேறு பல்வேறு நோய்களும் இதிலிருந்து உருவாகின்றன. போதைக்கு அடிமையானவர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். போதைப் பழக்கத்திற்கு அடிமையான நண்பரின் குடும்பத்தினரின்,  கவனத்திற்கு அனைத்து இளைஞர்களும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

போதைப்பொருளை உட்கொண்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த . ஏதேனும் மன அழுத்தத்தில் இருந்தால், அவர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், ஏதேனும் சமூக அமைப்புடன் பேச வேண்டும்.
நமது மன உறுதியால் எதிர்கொள்ள முடியாத பிரச்சனை எதுவும் இல்லை.  போதைப்பொருள் பயன்படுத்துதல்  மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாவதை சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றார். போதைப் பொருள் வாங்குவதற்காக செலவிடப்படும் பணம் குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. போதைக்கு அடிமையானவர்கள், தங்கள் சொந்த நன்மைக்காகவும், சமூகம் மற்றும் நாட்டின் நலனுக்காகவும் இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து வெளியே வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இளைஞர்களே நமது  மிக முக்கியமான சொத்துக்கள். அவர்கள் தங்கள் எதிர்காலத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த செலவிட வேண்டிய நேரமும் ஆற்றலும், போதை காரணமாக வீணடிக்கப்படுகிறது. மாணவர்கள் தவறான திசையில் செல்கிறார்களா என்பதைக் கல்வி நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். தவறு நடப்பது தெரியவந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

திமுக குமரி மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது- அண்ணாமலை 

Next Post

மக்களின் பார்வைக்கு தாஜ்மகாலில் உலகக்கோப்பை !

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies