சர்வதேச திரைப்பட விழா ஸ்ரீநகரில் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த விழா ஸ்ரீநகரையும் மையப்படுத்தி நடக்க இருக்கிறது.
ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தாகூர் மஹாலில் சர்வதேச திரைப்பட விழா அக்டோபர் 25 முதல் 26 வரை நடைபெற்று உள்ளது. இந்த விழாவிற்கு அழைப்பு கொடுத்து 24 மணி நேரத்தில் 30 நாடுகளில் இருந்து 160 படங்கள் வந்து சேர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடக்க உள்ளதால், அந்த பகுதியின் சிறப்பு பற்றி, சுற்றுலா தலம் பற்றி படங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் பல்வேறு நாட்டில் இருந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைப்பட வல்லுநர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் என கலந்துக்கொள்ள உள்ளனர் என தெரியவருகிறது.
இது பற்றி விழாக் குழுவினர் தெரிவித்ததாவது,
“ஸ்ரீநகரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியின் மையக்கரு ஸ்ரீநகரை மையப்படுத்தி நடத்த திட்டமிட்டு உள்ளோம். பல்வேறு நாட்டிலிருந்து திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உலகம் முழுவதும் பயணிப்பவர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர். இன்றைய சூழ்நிலையில் திரைப்படம் என்பது கருத்துருவாக்கம் (இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாமல் ஆக்குவதும்) செய்யும் கருவியாக இருந்து வருகிறது. சிறந்த படைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதே எண்கள் நோக்கம். இந்த விழாவில் திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் என விருது வழங்க உள்ளோம்.” என தெரிவித்தார்.