பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!
Oct 2, 2025, 05:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!

Web Desk by Web Desk
Aug 19, 2023, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த கால ஆட்சியாளர்கள் பழங்குடியினச்  சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியோ, பழங்குடியின சமூக மக்களின் வளர்ச்சியில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறார் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பெருமையுடன் கூறியிருக்கிறார்.

திரிபுரா மாநிலத்தில் பல்வேறுப் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இச்சமூகங்களின் முக்கிய நிர்வாகிகளுக்கான ஆலோசனை பட்டறையின் தொடக்க அமர்வு அகர்தலாவில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேசுகையில், “பழங்குடியினர் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவர்கள். ஆகவே, அவர்களது வளர்ச்சிதான் மாநிலத்திற்கு முக்கியம்.

இதற்கு முந்தைய அரசுகள் பழங்குடியினச் சமூகத்தினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால், பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, பழங்குடியினச்  சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். பழங்குடியினச்  சமூக மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி விடமுயற்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்டு வருகிறார்.

மேலும், பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திரிபுரா மாநில அமைச்சரவையின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். அதேபோல, மத்திய அமைச்சரவையிலும், பழங்குடியினச்  சமூகத்தினரின் பிரதிநிதித்துவத்தை பிரதமர் உறுதி செய்திருக்கிறார். பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கேற்ப மாநிலத்தின் வசிக்கும் பழங்குடியினச் சமூக மக்களுக்குச்  சேவையாற்றுவதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இந்த முயற்சியில் பழங்குடியினச்  சமூகத்தினர் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அரசின் நலன் சார்ந்த கொள்கைகளையும், சாதனைகளையும் அடிமட்டத்தில் வசிக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் பல்வேறு பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைக்  கௌரவித்த முதல்வர் மாணிக் சாஹா, “பழங்குடியினரின் பாரம்பரிய உடையானது நமது மாநிலத்தின் மகத்தான பெருமையை வெளிப்படுத்துகிறது. தலைப்பாகை மற்றும் பாரம்பரிய ஆடைகளை அணிவது இன்று அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது” என்று கூறினார்.

Tags: PM Moditripura cm
ShareTweetSendShare
Previous Post

கச்சத் தீவு, மீனவ சமுதாய நலனை பற்றிப் பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது- அண்ணாமலை கேள்வி

Next Post

சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி அழைப்பு

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies