சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி அழைப்பு
Apr 29, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி அழைப்பு

ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

Murugesan M by Murugesan M
Aug 19, 2023, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் தேசிய தளமான இ-சஞ்சீவினி மூலம்  இதுவரை 140 மில்லியன் தொலைத்  தூர மருத்துவ ஆலோசனைகளுக்கு வழிவகுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, ஆரோக்கியத்தை ஒரு முக்கியமான அம்சமாகக் கருதிய காந்தியடிகள், ‘ஆரோக்கியத்தின் திறவுகோல்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். ஆரோக்கியமாக இருப்பது என்பது மனதையும் உடலையும் இணக்கத்துடனும் சமநிலையுடனும் வைத்திருப்பதாகும் என்று அவர் கூறினார். உண்மையில், ஆரோக்கியம் தான் வாழ்க்கையின் அடித்தளம். இந்தியாவில் சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, ‘ஆரோக்கியமே இறுதிச் செல்வம், நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா வேலைகளையும் செய்து முடிக்க முடியும்’.

கோவிட் -19 தொற்றுநோய், நாம் எடுக்கும் முடிவுகளின் மையப் புள்ளியாக சுகாதாரம் இருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டியுள்ளது. மருத்துவம் மற்றும் தடுப்பூசி விநியோகங்களில், மக்களை தாயகம் அழைத்து வருவதில் சர்வதேச ஒத்துழைப்பின் மதிப்பையும் காட்டியது.

மைத்ரி தடுப்பூசி முன்முயற்சியின் கீழ், உலகளாவிய தெற்கில் உள்ள பல நாடுகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா 300 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை வழங்கியது.   மீள்திறன் காலத்தின் மிகப்பெரிய கற்றல்களில் ஒன்றாக மாறியுள்ளது. உலகளாவிய சுகாதார அமைப்புகளும் நெகிழ்திறன் கொண்டதாக இருக்க வேண்டும். அடுத்த சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், தயாராகவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.  தொற்றுநோய்களின் போது நாம் பார்த்தது போல, உலகின் ஒரு பகுதியில் உள்ள சுகாதார பிரச்சினைகள் மிகக் குறுகிய காலத்தில் உலகின் மற்ற அனைத்து பகுதிகளையும் பாதிக்கும்.

இந்தியாவில், ஒரு முழுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம். சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்துகிறோம், பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்கிறோம், அனைவருக்கும் மலிவு சுகாதாரத்தை வழங்குகிறோம். சர்வதேச யோகா தினத்தின் உலகளாவிய கொண்டாட்டம் முழுமையான ஆரோக்கியத்திற்கான உலகளாவிய விருப்பத்திற்கு சான்றாகும்.

இந்த ஆண்டு, 2023 சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் அறியப்படும் சிறுதானியங்கள், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. முழுமையான ஆரோக்கியம்  அனைவரின் மீள்திறனை மேம்படுத்த உதவும் என்று நம்புகிறோம்.

குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலளாவிய மையத்தை நிறுவுவது ஒரு முக்கியமான படியாகும். மேலும், ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்துடன் பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சிமாநாட்டை நடத்துவது அதன் திறனைப் தீவிரப்படுத்தும். பாரம்பரிய மருத்துவத்தின் உலகளாவிய களஞ்சியத்தை உருவாக்குவது நமது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியமும் சுற்றுச்சூழலும் இயற்கையாகவே இணைக்கப்பட்டுள்ளன. சுத்தமான காற்று, பாதுகாப்பான குடிநீர், போதுமான ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவை ஆரோக்கியத்தின் முக்கிய காரணிகளாகும்.

‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற  தொலைநோக்குப் பார்வை, மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு – முழு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் நல்ல ஆரோக்கியத்தை எதிர்பார்க்கிறது. யாரும் விடுபட்டு விடக்கூடாது என்ற காந்தியடிகளின் செய்தியை இந்த ஒருங்கிணைந்த பார்வை சுமந்து செல்கிறது.

காசநோயை ஒழிப்பதற்கான நண்பர்களாக மாறவேண்டும் என்று நாட்டு மக்களுக்கு  அழைப்பு விடுத்துள்ளோம். இதன் கீழ், கிட்டத்தட்ட 1 மில்லியன் நோயாளிகள் குடிமக்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்போது, உலகளாவிய இலக்கான 2030 க்கு முன்பே காசநோய் ஒழிப்பை அடைவதற்கான பாதையில் நாம் இருக்கிறோம்.

இந்தியாவின் தேசிய தளமான இ-சஞ்சீவினி இதுவரை 140 மில்லியன் தொலை தூரமருத்துவ ஆலோசனைகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவின் கோவின் தளம் தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக எளிதாக்கியது. இது 2.4 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்குவதையும், உலகளவில் சரிபார்க்கக்கூடிய தடுப்பூசி சான்றிதழ்களை நிகழ்நேரத்தில் கிடைப்பதையும் நிர்வகித்தது எனத் தெரிவித்தார்.

Tags: PM Modipm modi speech
ShareTweetSendShare
Previous Post

பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!

Next Post

வர்த்தகர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதியக்கூடாது: உ.பி. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies