பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!
Aug 5, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடியினர் வளர்ச்சியில் பிரதமர் மோடி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்: திரிபுரா முதல்வர் பெருமிதம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த கால ஆட்சியாளர்கள் பழங்குடியினச்  சமூக மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியோ, பழங்குடியின சமூக மக்களின் வளர்ச்சியில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறார் என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பெருமையுடன் கூறியிருக்கிறார்.

திரிபுரா மாநிலத்தில் பல்வேறுப் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இச்சமூகங்களின் முக்கிய நிர்வாகிகளுக்கான ஆலோசனை பட்டறையின் தொடக்க அமர்வு அகர்தலாவில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பேசுகையில், “பழங்குடியினர் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவர்கள். ஆகவே, அவர்களது வளர்ச்சிதான் மாநிலத்திற்கு முக்கியம்.

இதற்கு முந்தைய அரசுகள் பழங்குடியினச் சமூகத்தினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினார்கள். ஆனால், பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, பழங்குடியினச்  சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். பழங்குடியினச்  சமூக மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி விடமுயற்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்டு வருகிறார்.

மேலும், பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திரிபுரா மாநில அமைச்சரவையின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். அதேபோல, மத்திய அமைச்சரவையிலும், பழங்குடியினச்  சமூகத்தினரின் பிரதிநிதித்துவத்தை பிரதமர் உறுதி செய்திருக்கிறார். பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கேற்ப மாநிலத்தின் வசிக்கும் பழங்குடியினச் சமூக மக்களுக்குச்  சேவையாற்றுவதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இந்த முயற்சியில் பழங்குடியினச்  சமூகத்தினர் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அரசின் நலன் சார்ந்த கொள்கைகளையும், சாதனைகளையும் அடிமட்டத்தில் வசிக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் பல்வேறு பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைக்  கௌரவித்த முதல்வர் மாணிக் சாஹா, “பழங்குடியினரின் பாரம்பரிய உடையானது நமது மாநிலத்தின் மகத்தான பெருமையை வெளிப்படுத்துகிறது. தலைப்பாகை மற்றும் பாரம்பரிய ஆடைகளை அணிவது இன்று அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது” என்று கூறினார்.

Tags: PM Moditripura cm
ShareTweetSendShare
Previous Post

கச்சத் தீவு, மீனவ சமுதாய நலனை பற்றிப் பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது- அண்ணாமலை கேள்வி

Next Post

சுகாதார அவசரநிலையைத் தடுக்கவும், சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி அழைப்பு

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies