தாமரை எங்கும் மலர்வதையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தி இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஷெசாத் பூனாவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த அவர், தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றும், புதுச்சேரியிலும் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.
அசாமில் மீண்டும் பாஜ.க ஆட்சியமைக்கும் என்றும் மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் – முதன்முறையாக அம்மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியமைக்கும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஷெசாத் பூனாவாலா தெரிவித்தார்.
















