வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வாறு பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23ம் தேதி நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் ஒவ்வொரு சுற்று முடிவுகளின் எண்ணிக்கை விவரங்களை அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாக்கு எண்ணும் பணியை எந்த விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் இல்லாமல் துரிதமாகவும், தெளிவாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் வலியுறுத்தினார்.
















